Wednesday, August 11, 2010

ஆடிப்பெருக்கும் நடுத்தரவர்க்கமும்

என்னங்க   நாளைக்கு ஆடிப்பெருக்கு  சாமான் வாங்கனும் மறந்திடாதீங்க...

என்ன வாங்கனும் …

பூச சாமான் பழம் மளிகை சாமான்  தாங்க..

என்னடி எல்லாத்தையும் சொல்ற….

ஆங்க காய்கறி மறுந்துட்டங்க அதயும் சேர்த்துங்க..

சரி  என்றவாறு யோசனையில் ஆழ்ந்தான் . குறைந்தபட்சம் 400  இல்லாட்டி 500 ஆகும். என்ன  செய்வது…

யோசனை….யோசனை….

என்னங்க யோசனை… மனைவி

ஒன்னும் இல்ல.. நாளைய செலவுக்கு என்ன செய்ய… அதான்.

எப்படியோ   பண்ணிதான் ஆகனும் பண்ணாம    எப்படி இருக்குறது.

எல்லாரு போலவும் நாமளும் செய்யவேண்டியிருக்கிறது .

கடன் வாங்க வேண்டியஇடத்துல வாங்கியாச்சு..இதுக்கு எங்க போறது.

எதாவது பண்ணுங்க…மனைவி.

என்னடீ சூழல் தெரிஞ்சுதான் பேசிறியா..

இல்லீங்க நாளக்கு  சாமி கும்பிடனுமுல்ல அதான்.

பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன் என்றான்.

மறுநாள் சாமி கும்பிட்டார்களா என்று தெரியவில்லை.

இதுநாள் வரையில் கண்களி்ல் அகப்படவில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails