என்னங்க நாளைக்கு ஆடிப்பெருக்கு சாமான் வாங்கனும் மறந்திடாதீங்க...
என்ன வாங்கனும் …
பூச சாமான் பழம் மளிகை சாமான் தாங்க..
என்னடி எல்லாத்தையும் சொல்ற….
ஆங்க காய்கறி மறுந்துட்டங்க அதயும் சேர்த்துங்க..
சரி என்றவாறு யோசனையில் ஆழ்ந்தான் . குறைந்தபட்சம் 400 இல்லாட்டி 500 ஆகும். என்ன செய்வது…
யோசனை….யோசனை….
என்னங்க யோசனை… மனைவி
ஒன்னும் இல்ல.. நாளைய செலவுக்கு என்ன செய்ய… அதான்.
எப்படியோ பண்ணிதான் ஆகனும் பண்ணாம எப்படி இருக்குறது.
எல்லாரு போலவும் நாமளும் செய்யவேண்டியிருக்கிறது .
கடன் வாங்க வேண்டியஇடத்துல வாங்கியாச்சு..இதுக்கு எங்க போறது.
எதாவது பண்ணுங்க…மனைவி.
என்னடீ சூழல் தெரிஞ்சுதான் பேசிறியா..
இல்லீங்க நாளக்கு சாமி கும்பிடனுமுல்ல அதான்.
பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன் என்றான்.
மறுநாள் சாமி கும்பிட்டார்களா என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment