பெரியகோவில் 1000 மாவது ஆண்டு விழா மழைமேகங்கள் கூடிய மழையுடன் நடந்தது. ஏழு இடங்களில் நாட்டுபுற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க
மக்கள் கூட்டம் ஆட்டு மந்தையாக மந்தையாக(அதில் என்னையும் சேர்த்து) பெரியகோவில் அரண்மனை என சுற்றினார்கள்.
மக்கள் கண்படும் பகுதிகளில் மட்டும் கலர் ஓவியங்கள் அலங்கார வளைவுகளில் காசு வாரியிறைக்கப்பட்டிருந்தது. முழுக்க முழுக்க தஞ்சை நகர மக்களுக்கும் சுற்றுபகுதிகளில் உள்ளவர்களுக்கும் பொழுதுபோக்காய் அமைந்தது தான் உண்மை.
விழாவில் கரை வேட்டி கொடி உள்ள வாகனங்களுக்கு காக்கி சட்டைகளிடம் மதிப்பு அதிகமாய் இருந்தது.
பொதுமக்கள் வரிசை இல்லாவிடில் நூறு பேர் கொண்ட குழு குழுவாக அனுமதிக்க பட்டடார்கள்.
முக்கிய மந்திரிகள் யாராவது வந்து விட்டால் மக்கள் மூச்சு காற்றின் வெப்பத்தில் தகிப்பதை தவிர்க்கதான் முடியவில்லை. ஒரே இடத்தில் இரண்டு மூன்று மணி நிற்க வேண்டிய அவசியம்.
2 comments:
புகைப்படங்கள் அருமைங்க.. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நாட்டிய நிகழ்ச்சி பார்க்கலையோ, அதைப்பற்றி எதுவும் சொல்லலையே.
ரொம்ப கூட்டம் அந்த பக்கம் போகலீங்க..
Post a Comment