Monday, September 20, 2010

சகோதரன்.

மருத்துவரிடம் செல்லவேண்டும்.  கடை  வாடகை   வீட்டு வாடகை  பாக்கி தரவேண்டும்.  வீட்டுல  அரிசி வேற தீரப்போவுது. மளிகை  சாமான்   வேற ஒரு லிஸ்ட் போட்டு வைக்சுருக்கா என் பொண்டாட்டி.

இன்சூரன்ஸ் கட்டியாகனும் வண்டி இன்சூரன்ஸ் முடிஞ்சு போச்சு வண்டி பேக் வீல் டயர் எப்ப  வெடிக்கபோவுதுன்னு தெரியல…

புள்ளக்கு பால்டின் வாங்கியாவுனும்   நெற்றியில்  நகங்களால் கீறியப்படி  ஆழ்ந்து   யோசித்து கொண்டிருந்தான்.

அவனால் முடிந்தவரை போராடி சம்பாதித்தாலும் பற்றாகுறையே வாழ்வாக இருந்தது.  தன் காலி்ல் நிற்கவும் அப்பாவின் சம்பாத்தியம்  அண்ணன்களுக்கு உதவிய அளவுக்கு இவனுக்கு உதவில்லை.

குடும்பத்தின் கடைசிபிள்ளையாக மாட்டியதால் மூத்தவர்கள் தேவை முடிந்து இவன் முறை  வருவதற்குள்  அப்பார் மேல் உலகம்  போய்விட தன்னுடைய அம்மாவை  கவனிக்கும் பொறுப்பும் இவன் தலையில் விழ    சொந்தவளர்ச்சிக்கு  தன்னை உட்படுத்தி கொள்ளாமல் இருந்தான்.

அப்பாருடைய   இறுதி சடங்கு தேவைகள்  முடிந்தவுடன்  தான் உண்டு தன் குடும்பம் என ஒதுங்க இவன்  இவன் அம்மாவும் தனியே...

சில வருடங்கள் அம்மாவும்   இவனை  தனியே விட்டு இறந்து விட  சகோதரிகளால் இவனுக்கு திருமணம் செய்விக்கபட்டது. அண்ணன்கள்  திருமணத்தில் கலந்து க
ொண்டார்கள்.


இவனால் முடிந்தவரை கஷ்டப்பட்டு உழைத்தும் பற்றாகுறை  வாழ்வு தான் நிச்சயம். கொடுத்து உதவ கூட ஆள்கள் கிடையாது.

யோசனையான முகம் நிரந்தரமானது.

யோசனை யாய் தன்னுடைய  கடையில் உட்கார்ந்திருந்தான்.
அவனுடைய  கைப்பேசி ஒலிக்க...

 உம் சொல்லுகண்ணா   .....என்றான்.

என்னய்யா.. என்று விசாரிக்க

அண்ணன் பேசுனாரு...

அவரோட குடும்பத்தோடு கோவிலுக்கு போறாராம்  ஏ.சி.வசதி உள்ள சுமோ   ஒன்று வேண்டுமாம்  டிராவல்ஸ்ல   விசாரிக்க சொல்லுறார் என்றான்.

1 comment:

DHANS said...

குடும்பத்தில் கடைசியாய் பிறந்தால் கண்டிப்பாக அவர்களுக்கான வாழ்க்கையை அனுபவிக்க முடியாது...

நல்ல பதிவு

LinkWithin

Related Posts with Thumbnails