Wednesday, September 22, 2010

இடிந்த வீடு

காலையில்   கண்விழித்தவுடன் சிறுநீர்  கழிக்க  ஒரு வீட்டிற்குரிய  அங்கலட்சணங்களை  இழந்து கொண்டிருந்த கட்டிடத்தின் ஓரம் ஒதுங்கினான்.

எழுந்து  நின்று சோம்பல் முறிக்கையில் கட்டிடத்தின் நிலைகுத்திய  கண்களின்  வழியே அந்த   வீட்டில்  வாழ்ந்தவர்களின் நினைவில்  மூழ்கிபோனான்.

கிராமத்தினுடைய    சிவன் கோவில் அர்ச்சகருக்காக  ஒதுக்கப்பட்ட    வீடு  அது.  ஐந்து பையன்கள்  ஒரு பெண்   இவர்கள் இருவரையும் சேர்த்து எட்டு பேர்.

கோவிலில் கொடுக்கும்  சம்பளமாய் நெல்  அவர்களுடைய பசியை  போக்கியும் போக்காமலும். செவ்வாய் வெள்ளியில்
கிராம காளிகோவில் தட்டில் விழும் ஒரு ரூபாய் ஐம்பது காசு நாணாயங்கள் தான் அர்ச்சகருடைய அதிகப்படியான வருமானமாக இருந்தது.


அவ்வப்போது  பெரியகோவிலில்  நாள் நட்சத்திரங்களில் கிராம மிராசுகள் செய்யும் அர்ச்சனைக்காக  அவர்கள்  பத்து  ரூபாயும் ஐந்து ரூபாயும் உபரி சம்பளம்.

இதில் ஆறு பிள்ளைகளின் தேவை  நிறைவேறி  படிக்க வைக்கவேண்டும்.   அந்த       கீற்றின் வீட்டின் வழியே வீட்டினுடைய உட்புறம் மழையோ    வெயிலோ     பஞ்சமில்லாமல் மழை பெய்யும் வெயில் அடிக்கும்.
பிள்ளைகளுடைய  கிளிசல் இல்லா உடைகள்  என்பது அபூர்வம்.

எவ்வளோ  கஷ்டங்களுக்கிடையேயும் அந்த அர்ச்சகர் கோவிலுக்குரிய கடமைகள்  அர்ச்சனைகள்  மிகவும் கர்ம சிரத்தையுடன் செய்து முடித்து விடுவார்.

எப்படியோ பிள்ளைகளையும் வளர்த்தார். பெரிய பிள்ளை   தட்டு தடுமாறி  சென்னைக்கு போய் கோவில் ஒன்றில்  அர்ச்சகராக  அந்த வீட்டின் நிலைமை மாறத் தொடங்கியது.

இன்று எல்லோரும் சென்னை க்கு இடம் மாறி மிகவும் நல்லநிலைமையில் உள்ளார்கள். வருடத்திற்கு ஒரு தடவை  வந்து கோவிலுக்கு அர்ச்சனை  செய்து விட்டு போவார்கள்.

பொருளாதாரத்தில் நல்ல நிலைமையில்  இருந்தாலும்  கஷ்டங்களுக்கிடையே இங்கு இருந்த நிம்மதி அங்கு இல்லை என்பது  அவர்களுடைய கருத்தான       இருந்தது.


என்னப்பா ஓரே இடத்துல நின்னுகிட்டு காலையிலே  யோசனை  ...  குரல்  கேட்டு அவனுடைய நினைவுகள் கலைந்தது.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails