Sunday, October 24, 2010

தமிழன்

தமிழன்
புரியாத மொழி பேசுபவனைக்
குருவாக பார்க்கிறான்
சரியாகத் தமிழ்ப்பேசுபவனைக்
குறுகுறுவெனப்  பார்க்கிறான்

காற்றாடி,கட்டில்,சோறு என்றால்
நகைக்கிறான்
திக்கு,திங்கள்,ஆழி என்றால்
புரியாமல்
திகைக்கிறான்

உண்மைதானே!
அவனைப்பொறுத்தவரை
மம்மி டாடி
அங்கிள் ஆண்ட்டி என்று
பேசுவது கண்ணியம்
அப்பா அம்மா
அத்தை மாமா
சொற்கள் அன்னியம்!

-புதுவை ப் பிரபா-

LinkWithin

Related Posts with Thumbnails