கால்கள் நடந்துவிடும்
தூரம்
வாழ்வின் எல்லைகள்
நடக்கிறேன்
சோர்வடைந்தாலும்
நடப்பதை மறக்கா
கால்கள்
முள்குத்தியது
வலி அரற்றிய மனது
நிற்காமல்
முன்னோக்கிகால்களின்
பயணம்
இன்று தெரிந்த
எல்லைகள்
நாளை தெரியாமல்
நீண்டது
மூச்சு முட்டிய து
நேற்று
நடந்தே ஆகவேண்டும்
நான் நானாக…
1 comment:
அருமையா இருக்கிறது தங்களின் முக்கால கவிதை . வாழ்த்துக்கள் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்
Post a Comment