தேடுதலில்
தொலைகிறது
வாழ்க்கை
காலையில்
தொடங்கிய
மழை விடாது
பெய்தது
பசிக்க தவறாத
உடல்
உணர்த்திய அறிவு
பையில் காசு
உணவு தேடுகையில்
எரிய
மறுந்துப்போன
அடுப்புகள்
கடையில் தூங்கிய
பூனை
மழை பெய்கிறது
விட்டு விட்டு
வந்த மின்சாரம்
வராது நிற்க
இருளில் ழுழ்கிய
வீடு
தீக்குச்சிகள்
எரிந்த ஒலியில்
சிமில் விளக்கின்
தேடல்
வெளிச்சத்தில்
தூங்கிய குழந்தை
இருளில் முழித்து
வீறிட
பசியா…
பயமா…
உண ர்வு தேடலில்
தாய்பரிதவிக்க
தந்தை
சிமில் விளக்கின்
தேடுதலில்…
4 comments:
கவிதை நன்றாக இருக்கின்றது
வாழ்க்கையை கூட தொலைத்தவர்கள் இருக்கிறார்களே!!!
நன்றிங்க வரோ.
தொலைத்தவர்களை விட இப்பொழுது தொலைத்து கொண்டிருப்பவர்கள் அதிகம் ரதி.
நன்றி..!
Post a Comment