நீண்ட
மௌன யுத்தம்
உச்சியில்
பறக்கும் பறவையின்
பறத்தல் ஓசையில்
கலையாத
வானத்தின் மௌ னம்
இலை கள்அசையாது
காற்று
தன் மௌ னம்
வெளிப்படுத்த
திக்கற்ற இலக்கில்
வெறித்த பார்வை
இமைகள் மூடாது
தன் மௌ னம்
வெளிப்படுத்த
வழிந்த கண்ணீர்
கோடுகள்
பசித்தசிறுவனின்
யோ சிப்பில்
காலம்
தன் மௌ னம்
வெளிப்படுத்த….
அகதிகள் முகாம்
ஆறுமணிக்கு
சாப்பாடாம்அறிவிப்பு.
2 comments:
அருமையான வரிகள்
நன்றிங்க அரசன்.
Post a Comment