Friday, December 24, 2010

மனிதர்கள் தான். விலங்குகள் என்று சொல்லி


மாற்றத்துடன் தொடங்கிய காலை  நீலவானம் ஆரஞ்சு நிறம்பூசியிருக்க அங்கும் இங்கும் பறக்கும் பறவைகள் கோடைகாலங்களில் இந்த நிகழ்வு இயல்பு.

குளிர்    வீசும் காலையை  இளம்வெயிலில் சூடேற்றும் மனித உடல்கள்  சொந்தகதைப்பேசி ,    ர் கதைப்பேசி தன் நியாயங்களை  எடுத்துரைக்கும் உரையாடல் களம் என்னவோ   அந்த அரசமரத்தடிதான்.

அன்று  காலை     நீல வானம் முழுதும் வெள்ளைமேகங்கள் சூரியகதிர்களை  சிறைவைக்க  அரசமரத்தடி ஆ  ராவாரம் இல்லாமல் இருந்தது.

குளிர்விலகாத அந்த  காலைப்பொழுதில் அரசமரத்தின்காற்றுவீச்சில் உண்டாகும் குளிரில் சிக்கி கொள்ள விரும்பாத மனித உடல்கள் இன்னமும்  வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலை மாறிகள்  பகுத்தறிவு விலங்குகள்.

இல்லை, இல்லை  பகுத்தறிவு மனிதர்கள் தான்.  விலங்குகள் என்று சொல்லி விலங்குகளை   அசிங்கப்படுத்த விருப்பமில்லை.

அரசமரம் நின்று கொண்டிருந்தது. எட்டுதிக்கிலும் தன் கிளைகளை   ப்பரப்பி  நடுவே  தன்  உடலை   கீழ்இறக்கி  வேர்களால்   நிலத்தில்  தன் பிணை   ப்பை பலப்படுத்தி நின்று கொண் டிருக்க  தினமும் கிளை களில்வழக்கமாய் வந்தமரும்  பறவைகள் வந்தமர்ந்து அரசமரத்துடன் உறவை ப் வளர்த்துகொண்டிருக்கும் இந்நிகழ்வு காலம் தோறும் நடக்கும் நிகழ்வு.

அரசமரத்தின் ஓரமாய்    மனிதர்கள் உருவாக்கிய  கோவிலை   புண ரமைத்து திருப்பணிகள்  நடைப்பெற   கும்பாபிஷேகத்தின் போது கலசத்தின்    மீது புனித நீ ர் ஊ  ற்றுவார்கள்.  புனித நீர் ஊற்றுவதை  மனிதர்கள் கண்ணை     மறைக்குமாம்.

அரசமரத்தின் கைகளை  வெட்டி வீழ்த்தி கொண்டிருந்தார்கள்  எங்கேயோ    வலித்தது.

2 comments:

தமிழ் உதயம் said...

புகைப்படமும் சொல்ல வந்த கருத்தும் அருமை.

http://thavaru.blogspot.com/ said...

நன்றிங்க தமிழ்உதயம்.

LinkWithin

Related Posts with Thumbnails