பரபரப்புக்கு பஞ்சமில்லாத நகரத்தின் வீதிகள். பயண த்தின் இடை இடையே ஏற்பட்ட வாகன நெரிசல். மக்களால் நிரம்பி வழிந்த சூப்பர் மார்கெட்கள்.
10 சதவீத தள்ளுப்படி 20 சத வீத தள்ளுப்படி தேவை யில்லாதவற்றையும் தேவையாய் வாங்கி குவித்த மக்கள். ஒன்று வாங்கினால் ஒன்று இலவச ப்பகுதியில் முண்டியடித்த கூட்டம்.
வாங்கிய பொருளை சுமந்து வருகையில் கிடைத்த சந்தோ சம் எதுவரை ? கடை வரையிலா? வீடு வரையிலா ? அல்லது சுற்றத்தாரிடம் சொல்லும் வரையிலா?
கலர் கலராய் வண்ணவிள க்குகள் வெளிசத்தில் வேண்டாம் என்கிற மனோ பாவத்தை கூட நமக்கு தேவை யோ என்கிற மன ஆட்டத்தை உண்டுபண்ணிய பொ ருள்களின் அணிவகுப்பில் நடுத்தர வர்க்கம் வீழ்வது நிச்சயம்.
புத்தாண்டு சிறப்பு தள்ளுப்படியே நடுத்தர வர்க்கத்தின் சில்லரை சேமிப்புகள் பொ ருட்களாய் மாறி புதிய வருசத்தின் முதல் நாளில் வீட்டினுள்கலராய் பல் இளிக்கும்.
வியாபார உல கின் கவர்ச்சியில் வீழ்வது பல விழிப்பது சில.
2 comments:
ம்ம்ம்... உண்மை, உண்மை! ஆசையோ அலை போல~~
”ஆசையோ அலை போல~~”
ஆமாங்க தெகா..அது எப்பதான் இல்லாம போகும்?
Post a Comment