ஊரில் பெரிய மனிதர்பெண்ணுடைய திருமணத்தை பற்றிய கற்பனைகள் நிறைய உண்டு. பெண்ணே மாப்பிள்ளையை தேடி கொண்டது .
பேசி சரிசெய்து விடலாம் அவரின் நினைவு நினைவாகவே இருக்க எனக்கு அந்த பையனை திருமணம் செய்து கொடுங்கள் என்று கூற அதிர்ந்து போய் தன்னுடைய பெயரை இவள்கெடுத்து விடுவாளோ என்று பயந்து பெண் பார்த்த பையனுக்கு மணம் முடித்த அப்பா.
படிப்பு முடிந்த நாள் அன்று எதிர் வீட்டு பையனோடு ஓட்டம் அப்பா சொல்லமுடியாது தவிக்க அவளது அம்மா வீட்டை வெளியில் வருவதையே தவிர்த்தாள்.
எதிரும் புதிருமாய் எப்படி இருப்பது. வீடு விற்பனைக்கு என்று போர்டை தொங்க விட்டு ஒரு நாள் ராவோடு ராவாக வீட்டை காலி செய்து வெளியூர் சென்றது.
வீட்டுக்கு வந்து பழகிய பையன் தன் பெண்ணை காதலித்தான் என்பது வீட்டிற்கு தெரியும். திடீரென்று பெண் வீட்டை விட்டு வெளியேறி பையனோடு செல்ல ஊர் வாய்காக பயந்து கொடி பிடிக்கும் பெற்றோர்கள்.
வீட்டின் கதவுகள் பூட்டியே கிடக்க வெளிவராத மனிதர்கள்.
தலைமுறைகள் மாறுகிறது. இச்சமுதாயத்தின் போக்குக்கு தகுந்தாற் போல் இளைய சமுதாயத்தினுடைய மனபோக்கில் பெரிய மாற்றங்கள்.
பழைமையின் வேர்கள் இன்னமும் கொஞ்சம் இருப்பதால் பெற்றோர்களி்ன் மனமாறுதல் என்பது இக்காலத்திற்கு தகுந்தாற்போல் என்பது ஏற்று கொள்ளமுடியா நிலையில் அவர்களின் வேதனை இயல்பு தான்.
மன மாற்றம் பெற்ற இளைய தலைமுறைகளின் விளைவுகள் அறிய (குறிப்பாக பெண் தலைமுறை) இன்னமொரு இருபதைந்து ஆண்டுகள் பொறுத்தால் தெரியும்.