Thursday, August 26, 2010

ஏமாற்றம்

முகத்தில் படர்ந்த
கருமை
தேவைக்கு ஊர்
சென்று  திரும்ப
போக்குவரத்து செலவு
போக..
மிச்சமாகும் காசு
பைசா செலவில்லா
  ர்சுற்றி
கையில் காசு மிஞ்சும்
எப்பொழுது கூப்பிடுவார்
எதிர்பார்ப்பும் கூடும்
முன்தினம் தகவல்
சொல்ல..
மறுநாள்கிளம்பி
வர..
அடுத்தவனுக்கு போன
அந்த வாய்ப்பு-இவன்
முகத்தில் படர்ந்த
கருமை...
எதிர்பார்ப்பு
ஏமாற்றமாய்...

Wednesday, August 25, 2010

அத்தனையும் பணமா?

நாலு மடிப்பாய்  வெள்ளை  சிகப்பு தாள் ஒன்று மடித்து  கிடந்தது.   என்ன அது என்ற வினாவுடனே கீழே குனிந்து அதை எடுத்தான்.

எடுத்தவுடனே   முகத்தில் ஏற்பட்ட மலர்ச்சி யை மறைக்கமுடியாது தடுமாறினான்.  சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு  பையில் தினித்தவாறு நடந்தான்.

அப்பா…… இன்னய செலவுக்கு ஆண்டவன் கொடுத்துட்டுடான். நினைத்தவாறு மேற்கொண்டு முன்னேறினான்   ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்து  கண்களால்  அங்குல அங்குலமாய்  மிகக் கவனமாக    தேடியப்படி யே நடந்தான் இன்னும் ஏதாவது   பணம்  கிடைக்குமா  என்ற தேடுதலுடன் நடந் தான் .

நடக்கும் போதே கற்பனை  வேறு ..இந்த  ஐம்பதுக்கு பதிலா  ஆயிரம் பத்தாயிரன்னு கிடைக்க கூடாதா இறைவா.

நடந்தான்….

முகம் தெரிந்தவர்களை கூட  அவன் கண்டுகொள்ளவில்லை   கண்கள் தரைப்பார்க்க  கிடக்கும்  வண்ண  காகிதங்கள்  அத்தனையும் பணமாக இருக்க மா  என்ற  எதிர்பார்ப்பில்    ஒவ்வொரு  காகிதத்தின் அருகில்   நின்று உற்றுபார்த்தவாறு நடந்தான்.

அவனுடைய  தேவையா  அல்லது அவனுடைய  ஆசையாக இருக்கலாம். அந்த   நிமிடம் முதல்  அவனுடைய  நடவடிக்கைகள்  மாறுபட்டு  இயல்பை தொலைத்த முகமாய்  நடந்தான்.


Thursday, August 19, 2010

சாதாரணன்

திட்டமிட்ட செயல்களில்
தொலைந்து போன
நினைவுகள் எல்லாம்
இன்றைய கனவுகளாய்
எதிர்பார்ப்புகளில்
தோற்றுபோனவன்
செய்கை  கடமையாய்
நம்பிக்கையாய்
செயல் தொடங்கி
முடிவுகள் வேதனையாய்
திரும்பவும்
திட்டமிடுதல் பயமாய்
உருண்டோடும் சக்கரமாய்
தோற்றவனின்  வாழ்வு.

Wednesday, August 18, 2010

ஐந்தாம் வகுப்பு சிறுவனுடன் நேர்காணல்

தம்பி அந்த  கோயில்ல  உக்காந்து இருக்கேன் வந்து பிக்கப் பண்ணிக்க என்று தன் நண்பனிடம் சொல்லிவிடைப்பெற்று அங்கிருக்கும் கோவில் கட்டையில் அமர்ந்தான்.

நண்பன் வரும் வரை பொழுது போக வேண்டுமே  என்று கைப்பேசியை  வைத்து நோண்ட ஆரம்பித்தான். இதை கவனித்து கொண்டிருந்த  மாடுமேய்த்து கொண்டிருந்த  சிறுவன் கொஞ்ச  கொஞ்சமாய் அவனை   நோக்கி முன்னேறினான்.

அவன்   சிறுவனை  நோக்கி  திரும்புகையில்   வாயெல்லாம் பல்லாக புன்னகை செய்தான்.

கைப்பேசியில்உள்ள  நிழற்படகருவியினால்  அவனை படம் பிடிக்க வெட்கமாய் சிரித்தான்.

அவன்   சிறுவனுடன் நேர்காணல் நடத்த ஆரம்பித்தான்.

எத்னாவது படிக்கிற…?

அஞ்சாவது.

எங்க ?

அதே அங்க  என்று பக்கத்திலிருக்கும் பள்ளியை காண்பித்தான்.

உம் பேரு ?

பிரவீன்.




டீச்சரா.. சாரா உனக்கு…

டீச்சரு..

எத்தன டீச்சரு  உம்பள்ளிகூடத்துல..

ஆங்..எங்க டீச்சரு பேரு லித்திகா.. இன்னொரு டீச்சரு..

இன்னொரு டீச்சரு பேரு..

தெரியாது.

100 ல்ல  99  போச்சுன்னா எவ்வளப்பா..

சில   நிமிடங்கள் மௌன    ம்.

என்னப்பா எவ்வளவு..

98            .. இது சிறுவன்.

என்னது 98 ....?  அப்ப 50 ல்ல 29  போச்சுன்னா..

 வினாடியும் தாமதிக்காது தெரியல  என்றான்.

சினிமா பாப்பியா ?

பாக்கமாட்டேன்.

எந்த நடிகர புடிக்கும்?

அர்சுன்.

நடிக ?

நடிகன்னா...

அதான் நடிகரோட  சேந்து ஆடுவாங்களே

சே..அதெல்லாம் புடிக்காது.

சாப்பாடு கட்டிட்டு போயிடுவியா...

பள்ளிகூடத்துல போடுவாங்க...

உனக்கு பத்துமா...

நான் நிறைய வாங்கிப்பேன்.

பள்ளிகூடத்துல    யூனிபார்ம்  உண்டா..

உண்டு நான் இன்னும் எடுக்கல..

ஏன்?

அப்பா வேல பாத்த  எடத்துல  காசு வல்லேன்னு சொன்னாங்க..

லீவு நாள்ல என்ன வௌ  டுவ..

கபடி..

யோவ் வாய்யா   என்று நண்பன்  கூப்பிட்டவுன்  சிறுவனிடம் விடைப்பெற்று பறந்தான்.

Friday, August 13, 2010

வெளிப்பாடு




பொருட்கள் தேடுகையில்
குழப்பம்
உடன் வந்தவர்களுக்கு
உண்டான  வெறுப்பு
நல்லாயிருக்கா
கருத்து கேட்க
மௌ    னித்தவர்களால்
குழம்பி
பலகடைகள்
ஏறி இறங்கி
மனைவிக்காக
வாங்கிய பொருளில்
தெரிந்த அவனது
அன்பு…

Wednesday, August 11, 2010

ஆடிப்பெருக்கும் நடுத்தரவர்க்கமும்

என்னங்க   நாளைக்கு ஆடிப்பெருக்கு  சாமான் வாங்கனும் மறந்திடாதீங்க...

என்ன வாங்கனும் …

பூச சாமான் பழம் மளிகை சாமான்  தாங்க..

என்னடி எல்லாத்தையும் சொல்ற….

ஆங்க காய்கறி மறுந்துட்டங்க அதயும் சேர்த்துங்க..

சரி  என்றவாறு யோசனையில் ஆழ்ந்தான் . குறைந்தபட்சம் 400  இல்லாட்டி 500 ஆகும். என்ன  செய்வது…

யோசனை….யோசனை….

என்னங்க யோசனை… மனைவி

ஒன்னும் இல்ல.. நாளைய செலவுக்கு என்ன செய்ய… அதான்.

எப்படியோ   பண்ணிதான் ஆகனும் பண்ணாம    எப்படி இருக்குறது.

எல்லாரு போலவும் நாமளும் செய்யவேண்டியிருக்கிறது .

கடன் வாங்க வேண்டியஇடத்துல வாங்கியாச்சு..இதுக்கு எங்க போறது.

எதாவது பண்ணுங்க…மனைவி.

என்னடீ சூழல் தெரிஞ்சுதான் பேசிறியா..

இல்லீங்க நாளக்கு  சாமி கும்பிடனுமுல்ல அதான்.

பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன் என்றான்.

மறுநாள் சாமி கும்பிட்டார்களா என்று தெரியவில்லை.

இதுநாள் வரையில் கண்களி்ல் அகப்படவில்லை.

Thursday, August 05, 2010

உயிர்ப்பின் உரிமை



வெளிவந்த வார்த்தைகள்
மனதின் உள்இருப்பை
முகம் காட்டி
செயல்காட்டி
 “ தத்தி”  யாய்
பெயர் அறியாமை
உள்ஒன்றாய்
புறம் ஒன்றாய்
முகம் காட்டாது
செயல் மறைத்து
வஞ்சகமாய்உருவாகி
ஒன்றிலும் நில்லாது
காலங்கள்ஏற்ப
முன்பின் ஓடி
அலைதல் வாழ்வாய்
தற்காத்து பிழைக்க
உயிர்ப்பின் உரிமை
அறியாமையும்
வஞ்சகமும்

Wednesday, August 04, 2010

எந்த வேசி மவனோ ?



ஏன் சார்லஸ் கடைக்கு போவலையா?

இல்லீங்க சாமான் வாங்க வந்தேன்…சைக்கிள வச்சிட்டு சாமான் வாங்கிட்டு வெளில வந்து பாத்தா சைக்கிள காணோம்?

பூட்டு ன சைக்கிள ஒண்ணு  நிக்கது?

எந்த வேசி மவனே ா     எடுத்துட்டு போயிட்டாங்க அதான்  நின்னுகிட்டே  இருக்கேன்.

வாய் முனுகியது. அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை நடந்தது.

வைத்த கடைக்கும் மறு கடைக்கும் நடந்தார். கோபம் பொங்க வாய் வார்த்தைகள் அள்ளி வீசி கொண்டிருந்தது.

பூட்டின சைக்கிள் அருகில் நின்று கொண்டு

ராஜா இது உங்க சைக்கிளா...

எங்க இது உங்க சைக்கிளா....

எண்ண    இது உங்க சைக்கிளா...

அருகில் நின்றவர்களிடம் விசாரித்தார். எல்லோரும் இல்லைஎன்று தலையாட்டினார்கள்.

சைக்கிள்  பூட்டியிருந்தது. மாத்தி எடுத்து சென்று விட்டார்கள் போல  பூட்டை உடைத்து எடுக்க வேண்டியது தான் என்று சொல்ல....

அரக்க பரக்க சிறுவன் பல் மருத்துவமனையிலிருந்து ஓடிவந்தான்.

ஏங்க என் சைக்கிள் பூட்ட உடைக்கினும் சொல்றீங்க என்று கேட்டபடியே வந்தான்.

இது உன் சைக்கிளா.... என்றப்படி இன்னும் வேகமாய் திட்ட ஆரம்பித்தார்.

அவர் என்ன செய்ய முடியும் நாள் ஒன்றுக்கு ரூ. 120  சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.

ஏமாற்றமான முகத்துடன் கோபமாய்   திட்டி கொண்டே சென்றார் எல்லோருடைய பார்வையும் அவர்மேல் குவிந்திருந்ததை தவிர்க்கதான் முடியவில்லை.


LinkWithin

Related Posts with Thumbnails