ஒரு மாதம் முன்பு வரை கண்கள் பார்க்கும் எல்லை வரை பசுமை போ ர்த்தியிருந்த வயல்கள் நிறம் மாற த்தொடங்கி அ டர்ந்த பச்சையில் அங்கு அ ங்கு பொ ன்நிறம் கொ டுக்க காலை மாலை சூரியகதிர்களின் எதிரொலிப்பில் மெல்லிய காற்று நெற்பயிர்களின் அ சைவு தினமும் ரசிக்க தக்கதாய் இ.ருந்தது.
பொ ன்நிறமே கொ ஞ்சம் கொ ஞ்சமாய் தன்னை வியாபித்து கொள்ள ஏதோ ஒரு அ றிவிப்பை விவவசாயிக்கு கொ டுத்தப்படி இருந்தது.
விவசாயி வானம் பார்த்தான் நீலவானம் தென்படுகையில் நிம்மதியும் கருமேகங்கள் காண்கையில் கவலை யும் சூழ்ந்து கொ ண்டது.
சீக்கரமாய் உன்னை நீ பொன்நிறமாய் உருமாற்றம் செய்துகொள்ளகூடாதோ ? என்று மனதின் வழி நெற்பயிர்களுடன் பேசினான்.
இவ்வள வு நாள் பெய்தாய் இப்பொழுது ஏன் பெய்கிறாய்? என்று வானம் பார்த்து கேட்டான்.
நெற்பயிரும் சும்மாயிருந்தது.
வானமும் சும்மாயிருந்தது.
” கைக்கு எட்டியது , வாய்க்கு எட்டாதோ ” என்று மனதுகுள் பேசினான்.
நெற்கதிர்கள் முற்றி வெயிலில் காய்ந்தது காலை மௌ னமும் மாலை யில் சலசலத்து காற்றோ டு பேசியதுபார்க்க மகிழ்வெய்தினான் விவசாயி.
நிமிடங்களில் மாறும் நிலைமையாய் மறுநாள் பெய்த மழை நெடுசாண் கிடையாய் நனை ந்த நெற்கதிர்கள் காற்று இல்லை சத்தம் இல்லை நீண்டிருந்த அமைதியில் இடையே பறவை களின் சத்தம்.
விவசாயியை வெறுமை சூழ்திருந்தது.
12 comments:
யதார்த்ததை சொன்னது வெறுமையான வாழ்க்கை.
வேளாண்மைன்னா சில நேரங்களில் அப்படிதான்...
ம்ம்ம் ... வானத்திற்கும் பூமிக்குமான சம்பாஷனை - விவாசாயி - கம்பியில்லா தந்தி. நல்லாயிருக்கு!!
வானம் பார்த்த விவசாயியை இயற்கை என்கிற மழை வாய்பார்த்தவன் என்பது போல் செய்துவிட்டது.
''மனதின் வழி நெற்பயிர்களுடன் பேசினான்.'' இந்த வரிகளை ரசித்தேன்.
இதைத்தான் “எதுவும் நம் கையில் இல்லை”என்றார்களோ !
உண்மைங்க தமிழ்.
தப்பிவரும் பருவங்களினால் வரும்விளைவுகள் சி.கருணாகரசு நன்றிங்க.
நல்லாயிருக்கா தெகா நன்றிங்க..
சில ஆண்டுகளா இதாங்க ரதி மழை நேரத்துல வெயிலும் வெயில் நேரத்துல மழையும் முன்அறிவிப்பு இல்லாது நடக்கும்.
ஆமாங்க ஹேமா நன்றிங்க...
வேளாண்மைன்னா சமயத்ல அப்படித்தான்.
ஆமாங்க லெட்சுமி.
Post a Comment