யாருக்கு தெரியும்?
நிமிடங்களில்
சென்ற உயிர்
யாருக்கு தெரியும்
யாரும் அறியாது
போகும் உயிர்
இதுவென்று
சிரித்தார்கள்
வரும் நிமிடங்களை
வாழ்ந்து
நாளை யை திட்டமிட
வேகமாய் நடந்தார்கள்
பொ ங்கியெழும்
பிரவாகம் முன்
மனித உயிர்கள்
தூசி தான்
மனிதம் தான்
கவலை ப்படவேண்டும்
இயற்கை ஏன்?
இயற்கையை இயற்கையாய்
இருக்கவிட்டால் தானே….
4 comments:
ரொம்பச் சரி...
நன்றிங்க ராஜன்.
எங்களுக்காகப் படைக்கப்பட்ட இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவன் மனிதன்.அதை எதிர்க்கும்போதுதான் அவலங்கள் !
ஆமாங்க ஹேமா..நன்றிங்க.
Post a Comment