வெட்ட வெளியில்
சுற்றி திரிந்த
வண்ண த்துப்பூச்சி
தப்பி தவறி
சன்னல் வழியே
மண்டபத்தில்
உட்கார இடம்தேடி
ஓர் கிளை தேட
மரம் அழித்த
மனித தலை களால்
நிரம்பிய மண்டபம்
மாலை நேர
செயற்கை வெளிச்சம்
வழி தெரியாது
வண்ண த்துப்பூச்சியின்
பறத்தலில்
நிரம்பிய மண்டபம்
தன்னந்தனியாக
சுற்றி திரித்தலில்
தவித்த மனதும்
லயித்த கண்களும்
வழித் தேடி…
அமர இடம் தேடி…
இன்னமும் அலை ந்தது
வண்ண த்துப்பூச்சி
2 comments:
மரங்களை அழிக்கும் மரத்த மனிதப் பண்பைப் பாடுகிறது பட்டாம்பூச்சி !
ஆமாங்க ஹேமா..!!
Post a Comment