பொழுது சாயும் முன்னே வீட்டை அடைந்துவிட வேண்டும் என்ற வேகம் தெரிந்தது அவனுடைய வண்டி ஓட்டுதலில்சமமான பாதை யிலும் குண்டு குழியுமான பாதையில் வண்டி பயணித்தது.
பெண்ணுடன் பயண ம் என்பதால் சீரான வேகத்தில் தான் வண்டி சென்றது. காலை யிலிருந்து கல்யாண ம் , கோவில் என்று செல்ல இருட்டு முன்னே ஊ ர் திரும்பிவிடவேண்டும் என்ற அவசரம்.
கிராமங்களின் இடையே செல்லும் பாதை அ வசர தேவை என்றால் நான்கு கிலோ மீட்டருக்கு அ ப்பால் ஏதாவது கிடைக்கலாம்.
பெண்ணுடன் பேசியப்படியே வண்டி ஊ ர் நோக்கி பயணித்தது.
புதிததாக தார் சாலைப் போடுவதற்காக கருங்கல் சாலை அமைந்திருந்த சாலை யில் வண்டி அ லை ந்தது.
என்னடா ..இது அலைகிறது என்று வண்டியை நிப்பாட்டினான். வண்டி பின்சக்கரம் காற்று இறங்கி தாரையோ டு ஒட்டியிருக்க …இங்கேயும் அ ல்லாது அங்கேயும் அ ல்லாது நடுவில் மாட்டிக்கொ ள்ள….
வ ண்டியை தள்ளினால் குத்தியிருக்கும் ஆ னியினால் டியூப் பயன்படுத்த முடியாமல் ஆகிவிடும். அப்படியே வண்டியை நிப்பாட்டினான்.
அ வனும் பெ ண்ணும் இறங்கி நின்றார்கள். பெண்ணை உற்றுபார்த்தார்கள் அவனை உற்றுபார்த்தார்கள் தன்வழியே சென்றார்கள்.
மோ ட்டார் சைக்கிளில் வந்த நடுவய துகாரர்கள் தன்னுடைய வண்டியை நிப்பாட்டி ஏன்? என்ன விசாரிக்க…
அவனுக்கு நிம்மதி வந்தது. வண்டி பஞ்சர்என்று சொல்ல..
இருங்க தம்பி ஒன்னும் கவல படாதீங்க இதோ நான் பையன வர சொல்றேன் என்று அ ங்கிருந்தப்படியே கைப்பேசியில் தொடர்பு கொ ண்டு மெக்கானிக் பையனை அழைத்தார்.
எப்பா…அவங்க லேடீஸ் கூட நிக்கிறாங்க சீக்கிரம் வாப்பா என்று சொல்லி…
ஒட்டிட்டு பாத்து போங்கப்பா என்று தன் வழியே சென்றார்.
சிறு நன்றியை கூட எதிர்பார்க்கவில்லை .
அவர் சொ ல்லிய பையன் விரைவாய் தன் செயல் முடித்துகொ டுக்க…. இவன் நிம்மதியடைந்தான்.
பத்துக்கு ஆ றுபேர் பார்த்தப்படியே செல்ல இருவர் கேட்டால் செய்யலாம் என்ற ரீதியில் பார்க்க இருவர் மட்டுமே தனாய் உதவ முன்வந்தார்கள்.
பொழுது சாயும் முன்னே அவன் ஊ ர்போய் சேர்ந்திருப்பான்.
2 comments:
உதவி செய்யும் மனம் இருந்தாலும் துணிச்சலுடன் அதைச் செய்ய முன்வர எல்லோராலும் முடிவதில்லை.வீணாக வேறு எதிலும் மாட்டிக்கொள்வோமோ என்றொரு பயம் அல்லது தயக்கம்தான் !
தயக்கத்தவிடவும் பயம் தான் அதிகம் ஹேமா...
Post a Comment