Tuesday, April 12, 2011

சருகும் உடலும்….



மரமொ ன்றில்
உதிர்ந்த சருகு
காற்றடித்த திசையெல்லாம்
பறந்தது
எண்ண  ங்கள் இல்லாது
உண  ர்வுகள்சுவை 
இல்லாது
கால்கள்பயணித்த
திசையெங்கும்
பயண ம்
உறவில் ஒட்டிய
மரத்தின்
கடமைகள் முடித்து
தன் சாரம் இழந்து
நிறம்மாறி
காற்றின் போக்கில்
தொடர்பு அறுத்து
சுதந்திரமாய்
தன்போக்கில்
சருகும்
உடலும்….

2 comments:

ஹேமா said...

சருகானபின் சுதந்திரமா உதாசீனமா இல்லை மண்ணுக்கே உரமாகும் நன்றியுணர்வா !

தவறு said...

அதனாங்க தெரியல...

LinkWithin

Related Posts with Thumbnails