அந்த பெண்ணை போய் அழைத்துவந்தவர்களில் ஒருவர் செல்போனில் சத்தம் போட்டுகொண்டிருந்தார்.
யோ வ் ராமலிங்கம் ..அந்தபார்ட்டி என்னபுடிச்சு நச்சரிக்கிறான்..
நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க…என்னய்யா பதில் சொல்லறது.
நீங்க தானே என் பொண்டாட்டி அழைச்சிட்டு போனியோ …
நீங்களே கொண்டுவந்துவிடுங்க அப்படீன்னு பார்ட்டி நச்சரிக்கிறான் என்றார் பஞ்சாயத்து பேசப்போனவர்களில் ஒருவர் .
படிச்சப் பொண்ணா பாத்து கட்டிட்டு வந்துட்டான் வந்த எடத்துல மாமியாரு மருமகளுக்கு ஆவல போலிருக்கு…
அதனால காலையிலிருந்து சாயங்காலம் வரைக்கும் வெயில்ல நிக்கவைச்சிருக்கான் மாப்பிள்ளகாரன்பொண்ணுவீட்டுகாரனுக்கு தெரிய அங்குள்ள பெரிய ஆட்களை பெண்வீட்டுகாரர்கள் அணுக …
இங்குள்ள பெரிய ஆட்களை அணுகி அவ ங்கிட்ட பேசி பொண்ண தனியா ஊருக்கு அனுப்பிவிட்டுருங்க என்று சொல்லஇவர்கள் ஏதோ பேசி பெண்ணை காரில் ஏற்றி அனுப்பி விட …
மாப்பிள்ளையும் சொந்தகாரர்களும் இப்பொழுது இவர்களிடம் வாங்க போயி பேசுவோ ம் என்று ஒற்றைகாலில் நிற்கிறார்கள்.
இந்த உலகம் எவ்வளவு தான் வேகமாக போனாலும் அல்லது சிந்தனை செய்தாலும்எத்தனை தலை முறைக்கு இன்னும் இதுமாதிரியான தண்டனை கள் இருக்கபோகிறதோ தெரியவில்லை ?
பழமையில் ஊ றிய திருந்தா ஜென்மங்கள் இருக்கும் வரை இது மாதிரியான நிகழ்வுகளுக்கு அழிவில்லை தான் போலும்.
எல்லா வசதியும் உள்ளவனிடம் இப்பிரச்சனை நடக்கிறது என்பது மிகமுக்கியம்.
4 comments:
நாகரீகங்கள் மாறினாலும் சில அடிப்படைக் குணங்களை மாற்றமுடியாமல் சுமந்துகொண்டுதானே திரிகிறோம் !
அட..வாங்க ஹேமா !!அறிந்த செய்திகள் தான் என்றாலும் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஹேமா....
எல்லா வசதியும் உள்ளவனிடம் இப்பிரச்சனை நடக்கிறது என்பது மிகமுக்கியம்.//
ஆமாம். பல வெளியில் தெரியாத பிரச்னைகளை பெண்கள் இன்னமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்..
மாடி வீட்டு கோமான்கள் உள்ளநாடு பயணமும் எண்ணங்களும் நன்றிங்க..
Post a Comment