நடுத்தரவர்க்கத்தினனாய் ஓடும் வாழ்வு. சமுதாயகட்டமைப்பின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டு வாழும்போது பெரிதும் குறுக்கீடாய் அமை வது அவர் அவர்களது சுயமரியாதை.
எதைப்பற்றியும் அலட்டி கொள்ளாத கீழ்தட்டு மக்களாய் இருக்கவேண்டும் அல்லது காசைக்காட்டி வாயைமூடும் பெரும்தனக்காரர்களாய் இருக்கவேண்டும் என்ற நடுத்தரவர்கத்தின் முனுமுனுப்புகள் கேட்டுக் கொண்டேதான் இருக்கும்.
தன்னுடைய வழி என்பதைவிடவும் தன்சுதந்திரம் என்றெல்லாம் பார்க்காது அருகில் உள்ளவர்கள் என்னசொல்வார்களோ என்ற மற்றவரின் சொல்லுக்கு மதிப்பு கொடுப்பதில் நடுத்தரவர்க்கம் என்றும் நடுத்தரவர்க்கமே…
நட்டத்திலும் துன்பத்திலும் யாரும் பங்கெடுக்கமுன்வரமாட்டார்கள். அவர்கள் வார்த்தை தான் வேதாந்தமாய் வாதமாய் முன்வை க்கப்படும் .
எவ்வளவு புரிதல்களோ டு எடுத்து சொ ன்னாலும் அவர்களுக்கு உரிமையுடைகளின் வார்த்தைகள் குப்பை தான்.
இன்றளவிலும் நடுத்தரவர்க்கங்களில் நடக்கும் குடும்ப சண்டைக்கு மற்றவர்களின் வார்த்தையும் ஒரு காரணம்.
நடுத்தரவர்க்கத்தின் பிரச்சனை க்கு மிகமுக்கியபங்கு பொருளாதாரம். வரும் வரவு அறிந்து செலவு செய்யதெடங்கினால் இன்றைய சமுதாயத்தின் கவர்ச்சியான அம்சங்களை பாதிக்கு மேல் இழக்கதொடங்கினால் ஏதோ குடும்ப வண்டியை ஓட்டலாம்.
குடும்பநபர்களின் அவசியங்களும் ஆசைகளும் எவ்வளவு தான் தடைபோடமுடியும் என்றகோண த்தில் ஒவ்வொரு பிரச்சனையும் அணுக ஆ ரம்பித்தால் நடுத்தரவர்க்கத்தின் கடன் இல்லாத வாழ்வு என்பது ஆச்சர்யம் தான்.
நடுத்தரவர்க்கம் என்பது எப்பொழுதும் ஆச்சர்யமும் அவல மும் நிறைந்த வர்க்கம் தான்.
இன்பங்களும் துன்பங்களும் முழுவதுமாய் அனுபவிக்க கூடிய பக்குவம் படைத்தவர்கள் நடுத்தரவர்க்கம்.
6 comments:
நடுத்தர வர்க்கம் குறித்து நன்றாக சொல்லி இருக்கிறிர்கள்.
கடந்த ஒரு வாரமாக பல விசயங்களினால் இந்த நடுத்தர வர்க்கத்தைப்பற்றி இதே போல் யோசித்ததை எப்படிங்க கண்டு கொண்டீங்க?
நல்லாயிருக்கு. இதே போல் தொடரவும்
நன்றிங்க தமிழ்..
அப்படியா அன்பின் ஜோதிஜி....தெகா ஊருக்கு போயிட்டாங்களா அன்பின்...
சமூகத்தில வாயில கண்ணில மூக்கில முகத்தில எல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்கிறதே இந்த நடுத்தர வர்க்கம்தானே.நானும் இதுக்குள்ளதான் !
அப்படியா ஹேமா....
Post a Comment