இரண்டுகால்
பாய்ச்சலில்
வலம் வந்த
காளைமாடு
தாள சத்தம்
வேகம் எடுக்க
ஆ டியது ஆடியது
கால்களின் சலங்கைகள்
சல..சலக்க..
ஓடியது ஓடியது
கூடியிருந்தவர்களின்
மகிழ்ச்சிக்காய்
ஆ டியது
இரவு பத்துக்கு
சுமந்த வேடம்
அதிகாலை ஐந்துக்கு
கலைக்கப்பட்டு
வாங்கபோகும்
காசுக்காய்
காத்திருந்த
பொய்காளை…..
2 comments:
பொய்க் காளையா...அப்போ மனுசன் வேஷம் போட்டானா !
ஆமாங்க ஹேமா மனுசன் போட்ட வேடம் தாங்க...
Post a Comment