காலங்களினால் தான்
பதில் கிடைக்கும்
நான் நம்புகிறேன்
செயல்கள் சரியானதே
என்னில்
என் பயனாய்
என் தேவையாய்
என் எதிர்பார்ப்பு
யாருக்கும்
எதற்கும்
தொந்தரவில்லாமல்
தான்
என் காரியங்கள்
யாருக்கோ பிடிக்கவில்லை
அதிகாரம் தடுக்கிறது
என் வளர்ச்சியில்
பாதிப்பென்று
இன்றைக்கு நான்
வாழ இடம்
தேடுகிறேன்
அதிகாரம் என்றைக்கோ
வாழ்வதற்காய்
இடம் தேடுகிறது
நான் நம்புகிறேன்
காலங்களினால்….
3 comments:
திரும்பவும் காலமா நாமா....காலம் கொண்டு வந்து விட்டாலும் முயற்சி நம்முடையதே !
ஹேமா முயற்சி இருந்தாலும் காலங்கள் அமையாவிடில் அத்துனையும் வீண் தானே...
அது என்ன காலம்?அதிஷ்டமா ?
Post a Comment