Monday, June 06, 2011

நான் நம்புகிறேன்



காலங்களினால் தான்
பதில் கிடைக்கும்
நான் நம்புகிறேன்
செயல்கள் சரியானதே
என்னில்
என் பயனாய்
என் தேவையாய்
என் எதிர்பார்ப்பு
யாருக்கும்
எதற்கும்
தொந்தரவில்லாமல்
தான்
என் காரியங்கள்
யாருக்கோ பிடிக்கவில்லை
அதிகாரம் தடுக்கிறது
என் வளர்ச்சியில்
பாதிப்பென்று
இன்றைக்கு நான்
வாழ இடம்
தேடுகிறேன்
அதிகாரம் என்றைக்கோ
வாழ்வதற்காய்
இடம் தேடுகிறது
நான் நம்புகிறேன்
காலங்களினால்….

3 comments:

ஹேமா said...

திரும்பவும் காலமா நாமா....காலம் கொண்டு வந்து விட்டாலும் முயற்சி நம்முடையதே !

தவறு said...

ஹேமா முயற்சி இருந்தாலும் காலங்கள் அமையாவிடில் அத்துனையும் வீண் தானே...

ஹேமா said...

அது என்ன காலம்?அதிஷ்டமா ?

LinkWithin

Related Posts with Thumbnails