Tuesday, July 19, 2011

தினக்கூலி


எதிர் பார்த்தலில்

தொடங்கும்

உழைப்பு

ஊ தியம்

கிடைத்துவிடும்

நம்பிக்கையில்

நண்பகல்

தாண்டியும்

தொடரும்

வேலை முடியும்

நேரம்

நாளை ஊதியம்

என்ற வார்த்தையில்

துவளும் மனம்

கறுத்தமுகம்

தளர்ந்த உடலுடன்

உழைப்பில் ஓய்வு

தினக்கூலி.

2 comments:

ஹேமா said...

வறுமையை இதைவிட வலியோடு சொல்லமுடியாது !

தவறு said...

தஞ்சை மாவட்டத்துல இதுபோன்ற கதைகள் ஏராளம் ஹேமா...

LinkWithin

Related Posts with Thumbnails