Monday, August 01, 2011

கண்டு தெளிய..

மேகங்கள் அற்ற

வானம்

குழம்பல்அற்று

ஓடும் சிறுஓடை

குழப்பம் தான்

இல்லை

கண்டு தெளிய…

மழிக்காத முகம்

அழக்கு ஆடை

தெருவோர பிச்சை

குழப்பம் தான்

இல்லை

கண்டு தெளிய..

தோய்த்தஆடை

விலைஉயர்ந்த

பொருட்கள்

மன கசங்கலாய்

தோய்த்த ஆடையின்

சுருக்கங்கள்

நிறையவே குழப்பம்

செய்ய..

யார் தான் யார்?

8 comments:

ஹேமா said...

யார்தான் யார்...
குழம்பியதைச் சரி செய்யவும் சரியானதைக் குழப்பவும்
அது அது அதன்படியே
மாற்றங்கள விதியாகுமே
தவிர...
விதிகளை மாற்ற
யார்தான் யார் !

தவறு said...

விதிகளை மாற்ற...

ராஜ நடராஜன் said...

கவிதையில் ஹேமாவின் சாயல் தெரிகிறதேன்னு சொல்ல வந்தால் வரிசையின் முதலில் ஹேமா:)

ராஜ நடராஜன் said...

வானமும்,ஓடையும்,பிச்சைக்காரனும் புரிந்தது.யார்தான் நான் மட்டும் புரியவில்லை.இதுக்குத்தான் நான் கவிதை சொல் விளையாட்டுக்கே போவதில்லை:)

Rathi said...

வேற யாரு? புரிந்தும், புரிந்துகொள்ள முடியாத நடுத்தர வர்க்க பிரகிருதிகளோ!!!

ராஜ நட, என்னையும் உங்க டீம்ல சேர்த்துக்குங்க. நானும் கவிதை விளையாட்டுக்கு போக பயம் :))

தவறு said...

ராஜநட ஹேமா அளவுக்கு நான் கெடையாதுங்க...

அப்புறம் ரதியையும் சேத்துங்குங்க டீமில...

தவறு said...

ரதி...ராஜ நட சேத்திட்டாங்களா...

ஹேமா said...

நல்லாத்தான் கூட்டுச் சேருறீங்க.இது எப்பவோ சேர்ந்த கூட்டணிதானே என்னை கலாய்க்க !

LinkWithin

Related Posts with Thumbnails