Wednesday, August 31, 2011

இறந்துபோன காவலர்கள்


சமுதாயத்தில் தன்னைநிலைநிறுத்தபொருள் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் எடுத்து கொண்ட வேடத்தில் நடித்தால்தான் தன் நிலைநிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம். வேடத்தில்நடிக்கதன்னை தகுதி ஆக்கிகொள்ளாதவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

சிலவாரங்களுக்கு முன் உத்ரபிரதேசத்தில் காவலர்கள்  தலைமைகாவலர்களாக பதவி உயர்வு பெற  நடைப்பெற்ற உடல்தகுதி தேர்வில் ஓடும் போது மயங்கி விழுந்து ஐந்து காவலர்கள் பலி என்ற செய்தி


சுட்டி இங்கே…


சகமனிதன் இறந்ததற்காக வருத்தபடவேண்டிய விசயம் இது. ஆனால் இச்செய்தியைப்படித்தவுடன்  சிரிப்பு தான் வந்தது.

தான் எடுத்து கொண்ட வேடம் காவலர் என்றால் அதற்குரிய தகுதியில் எப்பொழுதும் சரியாக இருக்கவேண்டியது தானே  காவலரின் கடமை. அதைவிடுத்து  வேலை யில் சேர்ந்துவிட்டோம் என்று இயந்திரதனமான வாழ்க்கை தான் இவர்களை இந்தஅவலத்துக்கு தள்ளிவிட்டிருக்கிறது.

இவர்களை  வழிநடத்தும் தலைமையும் இதற்கு ஒரு முக்கியகாரணம் அவர்களும் கண்டிக்கதக்கவர்களே…

என்மனதில்  சமீபத்தில் பாதித்த செய்தி இது.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails