Wednesday, August 31, 2011

சுயம்







உள்ளிழுத்து கொள்கிறேன்

என்சுயம் ஒவ்வாத

நடக்கமுடியாசெயல்களில்

மௌனமாய் விலகுகிறேன்

நீ வாழ்

நானும் வாழ்கிறேன்

எதிர்ப்பதில் வாழ்வா..!?

என் சுயம்

உடைக்கப்படுகிறது

உணர்வுகள்சிதைக்க

எனது வாழ்வில்பூக்களா…

முடியாத நேரங்கள்

நாளை கிடைத்துவிடும்

நம்பிக்கையில்

பொறுக்கிறேன்

சுயம் அழிகிறது

நான்

என்குடும்பம்

என்பிள்ளை என்று

காலங்கள்

நீண்டு கொண்டே யிருக்கிறது

சக்கையாய் வாழ்வும்

நகர்ந்து கொண்டுதானிருக்கிறது.

2 comments:

Rathi said...

சுயம், சில தருணங்களில் காயம் பட்டும், பல பொழுதுகளில் எங்களையே எங்களுக்கு அடையாளமும் காட்டியும். இயலுமானவரை என் சுயம் என்னை சுடாத படி, என்னை, என் சிந்தனையை கட்டமைத்துக்கொள்கிறேன்.

தவறு said...

என்னை...என் சிந்தனையை என்பது முக்கியம் ரதி.

LinkWithin

Related Posts with Thumbnails