Tuesday, September 20, 2011
இந்தியா ஒளிர்கிறது.
தினசரியில் படித்த செய்தி
இது. டாடா நிறுவனம் அறிமுகப்படுத்திய 22
கோடி மதிப்புள்ள தங்க கார் மாடல.
ஒருபக்கம் ஆச்சரியம் ஒரு பக்கம்
வேதனையாக தான் இருந்தது.
இந்தியா ஒளிர்கிறது…..
ஏழைகளின் தேவைகள் என்று எவ்வளவோ இருக்க 22 கோடியில் கார். இந்த
காரைக்காட்டி இன்னும் எத்தனை கார்களை விற்கபோகிறார்களோ தெரியவில்லை. எல்லாம் வியாபாரம் லாப நோக்கு...
இன்றைய இந்தியாவின் பொருளாதார நிலை ...நிறைய பேண்ட் சட்டை போட்ட ஏழைகள் . இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் வித்தியாசம்
அதிகமாகிவிட்டது.
கடனால் தற்கொலை என்று படிக்கும் அதே
நேரத்தில் இதுபோன்ற ஆடம்பரங்களை யும் நாம் பார்க்க கொடுத்து வைத்துள்ளோம்.
இது தான் இந்தியா .
Saturday, September 10, 2011
Tuesday, September 06, 2011
இவை மனித இ யல்பா
என்னுடைய காலைப்பயணத்தில் முதியவர் ஒருவர்
ஒட்டிக்கொண்டார். வண்டியில் ஏறியவுடன்
நான் அவன சும்மாவிட போறதில்ல …
என்றார்.
நான் புரியாமல் …யார சொல்லிறீங்க
என்று கேட்க..
அதாங்க அந்த அங்காடிகாரப் பயல..
ஏன்..என்னாச்சு?
எனக்கு தந்துகொண்டிருந்த மண் னணெய்
இவன் வந்தோடன்ன இல்லேன்னு சொல்லிபுட்டான் என்றார்.
என்ன காரணம் ? கேட்டால் உங்க வீட்டுல ரெண்டு கேஸ் சிலிண்டர் அதனால
உங்களுக்கு எண்ணெய் கெடையாதுகிறாங்க
என்றார்.
அவரு செய்யிற தப்புகளா நான்
காட்டிக்கொடுக்க போறேன் என்றார்.
உங்களுக்கு அவரு ஆவாததால் அவர தப்பு
சொல்லிறீயலோ என்று கேட்க...
அட ஆமாங்க....எனக்கு ஆவ லேன்னா நான்
அப்படி தான் செய்வேன்.
என்ன மனிதர்கள் இவர்கள்.
தனக்கு காரியம் ஆகும்வரையில் அவர்களின் தப்பைஅனுமதிப்பது…தனக்கு
காரியம் ஆகாதபோது அவர்களின் இருண்ட பக்கங்களைப்பார்த்து அவர்களை அடிப்பது.
இவை மனித இ யல்பா அல்லது சமூகத்தில் தன்னை
அடையாளப்படுத்தி கொள்ளும் நிகழ்வா தெரியவில்லை.
தான் வாழ எப்படியும் இருக்கலாம்
என்பது சித்தாந்தமோ …
சுயத்தில் தான் வாழ்வு…ஆனால்
இதுபோன்ற சுயத்திலும் வாழ்வு இருக்கதான் செய்கிறது.
Monday, September 05, 2011
Subscribe to:
Posts (Atom)