Friday, December 30, 2011

பார்வை




பார்த்த நொடியில்
சுருங்கியது
என் பார்வையினாலா
அல்லது
காற்றின் வீச்சா
அல்லது
வேறு பொருளின் தொடலா
சுருங்கிய
தொட்டாற் சினுங்கியை
கேட்ட மனது.


Wednesday, December 14, 2011

புகைப்பட தொகுப்பு

மேகமூட்டத்துடன் கூடிய காலையில் பூமியில் விழும்
 சூரிய ஓளி


மின்கம்பங்கிடையே காலைசூரியன்


எழும்பும் காலைகதிரவன்


கடவுளிடம் வேண்டி கோவில் வாயிலில்.....


வண்டிசாமி


மழையில் நனைந்த மலர்


உணவு தேடலின் போது....

Friday, December 09, 2011

சுயமே சொர்க்கமாகி



நீர் நிரம்பி உடைந்து போன  என் வயல்வரப்புகளை  சரிசெய்யவே   நேரம் சரியாய் போனது.

பெரியாறு  அணை   ப்பற்றி  அறியமுடிந்தது.  அதனைப்பற்றிய செய்திகளில் ஆர்வம் இல்லாமலசொந்த பிரச்சனைகளில்மூழ்கியே   வெளிவர வழிதேடுகையில் கழிந்தகாலங்கள்.

ஓர் ஆறுதல் நமக்காக பேசதானே நாம் நம்முடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தோம் அவர்கள் பார்த்துகொள்வார்கள் இவ்விசயங்களை என்று சற்றே நிம்மதி அடைகையில்அவர் வாங்கிய சொத்துகளில்  தன்னை தற்காத்து வழிதேட நம் பிரச்சனை பின்னுக்கு போனது.

நம்மில் சிறந்தவர்கள் குரல் கொடுக்க இவர்கள் கண்விழிப்பது இயல்பாக போய்விட்டது.

வாழ்வே சுமையாகி ஆகிப்போனதால் வந்தவினை.

சுயமே சொர்க்கமாகிப் போக    நாம் என்பதே  தேடக்கூடிய   ஒன்றாகி விட கட்டுகள் அவிழ்த்த ஓர் தனி மனித சுதந்திரம் எப்பொழுது...????

Saturday, December 03, 2011

கட்டுபாடு



கட்டுபாடுகளினால்
சிதைந்த வாழ்வு
கட்டுபாடுகளினால்
வளமானது
நோக்கங்கள் தான்
சிதைவும்
வளர்ச்சியும்
உண்டாக்க
கட்டுபாடு இயற்கையாய்….

LinkWithin

Related Posts with Thumbnails