முதுமை
காலப் பெருவெளிக்குள்
இழுத்துவரப்பட்ட
வயதுகளின் சாயல்கள்
நரைத்த முடி
சுறுங்கிய தோல்
தளர்ந்த நடையென
ஓரிடத்தில் அமர்ந்த
யோசிப்பில் தொடங்கிய
இளமைகால சிந்தனைகளின்
சீர்தூக்கல்கள்
நியாய அநியாய
மனோ பாவங்களின்
வெளிப்பட்ட வேதனையும்
இன்பங்களுமாய்
போகும் பொழுதுகளில்
நகரும் வாழ்வாய்
முதுமை.
3 comments:
நல்ல கவிதை.
இளமைகால சிந்தனைகளின் சீர்தூக்கல்கள் நியாய அநியாய மனோ பாவங்களின் வெளிப்பட்ட வேதனையும் இன்பங்களுமாய் போகும் பொழுதுகளில் நகரும் வாழ்வாய் முதுமை. //
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
இளமையை அசைபோடுவதுதான் முதுமையின் சந்தோஷம்.இதுதான் இயல்பென்று நினைக்கிறேன்.அழகான சிந்தனை !
Post a Comment