Wednesday, March 21, 2012

ஜனத் தலைவர் யார்?


இது பாரதி சொன்னது... யாவன் ஒருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது இந்த வறிய நிலையில் இருப்பது பற்றி இராப்பகல் வருந்துகிறானோ  ,

யாவன் ஒருவன் இந்த முப்பது கோடி இந்தியரும் வயிறாற உண்பதற்குஉணவும் உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களே  என மனமிரங்கி கண்ணீர் சொரிகிறானோ

யாவன் ஒருவன் பொதுஜனங்களுக்கு வந்த சுக துக்கங்களும் கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாக எண்ணி அனுதாபிக்கிறானோ

யாவன் ஒருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனது உயிரையும் இழக்கத் தயாராய் இருக்கிறானோ  ..

அவன் ஒருவனே ஜனத் தலைவன்.



இன்று….

தன் மானத்திற்காக தொண்டனி்ன் உயிரை ப்பறிப்பவன்.

தன் குடும்ப வாரிசுகாக  தன் கட்சியினரையே  கட்சியை விட்டு நீக்குப்பவன்.

சுவிஸ் வங்கியோ இன்னும் வேறு ஏதேனும் வங்கியிலோ கணக்கு வைத்திருப்பவன்.

நிலம் பறி்ப்பவன்

ஆட்கடத்தல் அடித்தடி கொலை  செய்பவன்.

இவர்களே இன்று ஜனத்தலைவர்கள்.

இது இந்தியா…..

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails