மகனே…
நீ பிறந்த அன்று
தோட்டத்தில்வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உணக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும்தென்னைமரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவைநீரும்
தந்துதவுகிறது
ஒரு நாள்…
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்
போது
எங்களை ஈ மொய்த்த செய்தி
வந்துசேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும் !
(படித்தது)