Thursday, December 27, 2012
Tuesday, December 25, 2012
தஞ்சாவூரும் தண்ணீர் பஞ்சமும்
வயலில் நட்ட நெற்பயிர்கள் முக்கால்வாசி சூழலை தாண்டி வந்து நெற்மணிகள் கருபிடிக்கும் சூழலில் உள்ளது. தட்டு தடுமாறி இதுவரை நட்டவயல்களுக்கு தண்ணீர் கிடைத்துவிட்டது.
இனிதான் தண்ணீர் மிக அவசியம் என்ன ஆகப்போகிறதோ என்கிற கவலை விவசாயிகள் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
போர்செட் பம்புகள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை. வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் தண்ணீருக்காக போர்செட்காரர்களை அணுகி வியாபாரம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு ஏக்கருக்கு ரூ 1500 அல்லது மூன்று மூட்டை நெல் என்கிறப்படி பேரம் பேசிகொண்டுள்ளார்கள். இது ஏற்றதாழ்வுகளுக்கு மற்றும் மனிதநேயத்துக்கு உட்பட்டது.
மழை இதோ பெய்துவிடும் அதோ பெய்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்க ஒரு மழையுடன் தன் இருப்பை வெளிகாட்டி வானம் மூடிகொண்டது.
குறுவை சாகுப்படி போர்செட் விவசாயிகளுக்கு பெருத்தலாபத்தை தனியார் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு விளைந்த இடத்துக்கே போய் எடுத்து கொண்டு கொடுக்க சாதாரண வாய்க்கால் விவசாயிகளுக்கு சம்பா கை கொடுத்துவிடும் நம்பிக்கையில் கடன் வாங்கி செய்தவர்கள் நிறையவே இருக்கதான் செய்கிறார்கள்.
இன்னும் சில மாதங்களில் இயற்கை என்ன செய்யபோகிறது? அரசாங்கம் என்ன செய்யபோகிறது என்று பார்ப்போம்.
இனிதான் தண்ணீர் மிக அவசியம் என்ன ஆகப்போகிறதோ என்கிற கவலை விவசாயிகள் மனதில் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
போர்செட் பம்புகள் வைத்திருப்பவர்களுக்கு கவலை இல்லை. வாய்க்கால் பாசனம் செய்பவர்கள் தண்ணீருக்காக போர்செட்காரர்களை அணுகி வியாபாரம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ஒரு ஏக்கருக்கு ரூ 1500 அல்லது மூன்று மூட்டை நெல் என்கிறப்படி பேரம் பேசிகொண்டுள்ளார்கள். இது ஏற்றதாழ்வுகளுக்கு மற்றும் மனிதநேயத்துக்கு உட்பட்டது.
மழை இதோ பெய்துவிடும் அதோ பெய்துவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருக்க ஒரு மழையுடன் தன் இருப்பை வெளிகாட்டி வானம் மூடிகொண்டது.
குறுவை சாகுப்படி போர்செட் விவசாயிகளுக்கு பெருத்தலாபத்தை தனியார் வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு விளைந்த இடத்துக்கே போய் எடுத்து கொண்டு கொடுக்க சாதாரண வாய்க்கால் விவசாயிகளுக்கு சம்பா கை கொடுத்துவிடும் நம்பிக்கையில் கடன் வாங்கி செய்தவர்கள் நிறையவே இருக்கதான் செய்கிறார்கள்.
இன்னும் சில மாதங்களில் இயற்கை என்ன செய்யபோகிறது? அரசாங்கம் என்ன செய்யபோகிறது என்று பார்ப்போம்.
Thursday, December 20, 2012
Wednesday, December 19, 2012
மாயன் காலண்டரும் மனித வக்கிரமும்
நேற்று சொந்த வேலையின் காரணமாக தஞ்சை சென்றேன். அதில் ஒரு வேலை பேண்டின் அளவை கூட்ட குறைக்க தெருவோர தையல்காரர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று ஒரு தையல்காரரை அணுகி என்னுடைய வேலையை முடிக்க கொடுத்து காத்திருந்தேன்.
சாப்பாட்டு நேரம் ஆகையால் பக்கத்து கடை தையல்காரர் தன்னுடைய வீட்டிற்கு மிதிவண்டியை ஏறி மிதிக்க எத்தனிக்கையில் எதிர்புறமாக தன்னுடைய தாய் தந்தையுடன் ஓர் இளம்பெண் வந்து கொண்டிருந்தாள்.
மிதிவண்டியில் அமர்ந்திருந்த தையல்காரர் தைத்துகொண்டிருந்த தையல்காரரிடம்
என்னப்பா வர்ற 21ம் தேதி உலகம் அழியப்போகுதாமே அதுக்குள்ள அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிச்சுருப்பா..
என்னப்பா வர்ற 21ம் தேதி உலகம் அழியப்போகுதாமே அதுக்குள்ள அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிச்சுருப்பா..
என்ன சொல்றே நீ...என்று கேட்க
அந்தா வர்ற பொண்ண புடிச்சு.........(மோசமான உடலறவு) வர்ணித்து சொல்ல ..
அடுத்த அடுத்த செய்திகளால் அந்த பகுதி தடம்மாறிப்போனது.
இப்படியும் மனிதர்கள்.
Subscribe to:
Posts (Atom)