Thursday, January 17, 2013

சொந்த புலம்பலில் ஓர் சிகிச்சை


சிகிச்சை காரணமாக ஆயுர்வேத மருந்து  எடுத்து கொண்டிருக்கிறேன். அன்று மதியம் தின்பதற்கு உகந்ததாக இருந்த பூவன் பழங்கள் 5 மேல் சாப்பிட மறுநாள் காலையில் இடது கண்ணின் இமைகளில் கட்டி ஏற்ப்பட்டது.
உடல் சூடு தனியாமல் கண் இமை வழியே பெரிய கட்டியாக உருவாகி இரண்டுநாட்கள் கண்ணை மூடிக் கொண்டது. கண்களில்இருந்து நீர் வழிந்து கொண்டே இருக்க நடைமுறை வாழ்வே துன்பகரமாக மாறியது.
கண்கட்டியின் பிரதி விளைவாக உடல் சூடு அதிகரிக்க அவ்வப்போது தலைவலி  சேர்ந்து கொள்ள  பொங்கல் விழா எனக்கு சிறப்பாக அமையவில்லை.
பொங்கல் விடுமுறையில் நண்பர்களுடன் சேர்ந்து செல்லும் சிறுபயணமும் ரத்தானது.
ஆயுர்வேத மருத்துவரிடம் தொலைப்பேசியில் கேட்க அவர் திரிபாலதி சூரணமும் வெள்ளை கல்கண்டு பொடி செய்து இரண்டையும்  பாலில் கலந்து குடிக்க சரியாகி விடும் என்று சொன்னார்.
இங்கு கண்கட்டியின் வேதனை உடனே குறைக்க ஆங்கில மருந்துக்காக நண்பரின் உதவியை நாடினேன்  அவர் சிப்ரோப்ளோவின் 3 மாத்திரை பரிந்துரைக்க மாற்று மருந்துகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு இதை எடுத்து கொண்டேன்.
கண்கட்டி பெரிதாய் கண்ணை மறைத்த இரவு நாட்டுவைத்தியம் ஒன்று சொன்னார்கள். ராமகட்டியை  நீரில் குழைத்து தடவ சொன்னார்கள் . அதையும் எங்கள்  
வீட்டில் செய்துவிட  பல முனை தாக்குதலில் மறுநாள் கண்கட்டி  சிதைந்து  சீழ் வெளியேற வழி குறைந்தது  வீக்கம் இன்னும் குறையவில்லை.
நாளை குறைந்துவிடும் நம்பிக்கையில்….

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails