Thursday, January 24, 2013

தஞ்சாவூரும் தண்ணீர்பஞ்சமும்


இயற்கை பொய்த்துவிட்டது. காவிரியும் வற்றிவிட்டது. கதிர்கள் பால் பிடிக்காமல்  காய தொடங்கிவிட்டது.
காய்ந்த வயல்களை பார்க்கவே சிரமம்.



போர்செட்காரர்களை அணுகி தண்ணீர் இறைப்பவர்கள் இறைத்து கொண்டிருக்க வாய்க்கால் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் செய்தவர்களின் நிலைமை மோசம்

ஒரு பக்கம் அறுவடை ஆரம்பித்துவிட்டது.  சன்ன நெல்ரகங்கள் தனியார் வியாபாரிகளிடம் போட்டியில் நிற்க மோட்ட நெல்ரகங்கள் கேள்வியில்லாமல் இருக்கிறது.

விவசாயிகளின் மனதில் தமிழகஅரசு இழப்பீடு எப்பொழுது அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில் சாதாரண விவசாயிகளுடன் சேர்ந்து அறுவடை செய்து நன்றாக லாபம் சம்பாதித்த விவசாயிகளும் அடக்கம்.

அரசு மௌனம் காக்க மக்களின் மனதில் எதிர்பார்ப்பும் கூடிகொண்டேயிருக்கிறது.

தமிழக அரசு காவிரியில் நீர் தர மறுத்த கர்நாடக அரசிடம் இழப்பீடு கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக செய்தி.

இன்னும் சிலமாதங்கள் பொறுத்திருப்போம்.

முன்பதிவு

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails