Thursday, February 14, 2013

ஜென்டைமேளமும் ஏமாற்றமும்


அலுவலகம் நோக்கியபயணத்தில் இருசக்கரவாகனம் விரைந்து கொண்டிருந்தது.   கேரள பாரம்பரிய இசையான  ஜென்டைமேளத்தின் இசை  தூரத்தில் இருந்து காதுகளில் விழுந்தது.

இருசக்கரவாகனம் விரைந்து மண்டபத்தை நெருங்க இசையின் ஒலியும் வேகமாய் காதுகளை வந்தடைந்து  ரசிக்க செய்ய...

மண்டபத்தை நெருங்க சில பல மீட்டர்கள் முன்னால் மனது

அந்த மண்டபத்துல யாருப்பா இது இவ்ளோ பெரிய நிகழ்ச்சி வைத்திருக்கிறது. அது வரவேற்பு மண்டபத்தான் ஆன  யாரு....

வினாகளும் விசாரணைகளும் தொடர்கிறது மனதில் வண்டி  மண்டபத்தை நெருங்கியது.  ஒலி பெருக்கியின் வாயிலாக இசை காதை துளைக்க இருசக்கரவாகனத்தில் சென்றப்படியேகண்கள் தானாய் மண்டபத்தினுள்  பார்க்க ஜென்டை மேளம் நடப்பதற்கான நிகழ்வே அங்குதெரியவில்லை.

அட ..பாவியளா...  மனது நினைக்க..

இசை  மீண்டும் காதுகளை வந்தடைந்து ரசிக்க செய்து கொண்டிருந்தது.

நீங்களும் பார்த்து ரசிக்கலாமே..


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails