உறவுகளின் அரவணைப்பில் நான்
வளர்கிறேன். நானும் உறவுகளை
அரவணைக்கிறேன்.
மனிதர்களை அடையாப்படுத்தி பழகும்
உறவுகளில் பந்தங்களை காணமுடியாது.
நம் இனத்தை சேர்ந்தவன் நாமும் அவனே
என்ற பெருதன்மையால் மட்டுமே ஏற்றதாழ்வுகள் இல்லா
உறவை வளர்தெடுக்க முடியும்.
இச்சமுதாயம் மனித உறவுகளின்
இணைப்பிற்கு பணத்தை பிரதானப்படுத்தியுள்ளது.
உறவுகளின் இணைப்பிற்கு அன்பு
அடித்தளமாய் இருந்தாலும் பணம் அதனை
விகாரப்படுத்தியுள்ளது.
இன்றைய உறவுகள் நாம் என்பது மருவி
நான் என்றாகி விட நான் என்கிற எல்லையின் பரப்பு மிகவும் குறுகிவிட சுற்றம்
பார்க்கா சுயநலம் பெருகி விட்டது.
உறவுகளில் ஒப்புமை ஒவ்வாமை தான்.
நயவஞ்சக உறவுகளும் இருக்கத்தான் செய்கிறது.
உறவுகள் இல்லாது நம் சமுதாய வாழ்வு சிறக்காது.
ஆகையினால் ....
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை போலும்.
No comments:
Post a Comment