Monday, May 27, 2013

படித்தவுடன் சிரித்த கவிதை


"தாத்தா...
யானை தெரியலை'
திருவிழாக் கூட்டத்தில்
எக்கி எக்கிப்
பார்த்த குழந்தை சொன்னது.
"இரு தூக்கிக் காண்பிக்கிறேன்'
என்றார் தாத்தா.
"யானை
ரொம்பக் கனம்...
தூக்கிருவியா?'
என்றது குழந்தை.

மு. பழனி இராகுலதாசன்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails