தினந்தோறும் காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது மக்களிடம் பிரபலமாகி வருகிறது. அதிலும் இப்போது ஜப்பானிய மக்களிடம் மிகவும் அதிகமாக பிரபலமாகி வருகிறது.
தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்று ஜப்பானிய மருத்துவர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதாவது தலை வலி, உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய், வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள், வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள், மூல வியாதி, சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்ற மிகப் பழைய கடுமையான வியாதிகள் மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் நூறு சதவீதம் வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
மருத்துவ முறைகள்:
* நீங்கள் காலையில் தூங்கி எழுந்ததும், பல் துலக்கும் முன்பே 650 மில்லி லிட்டர் தண்ணீர் அருந்துங்கள்.
* பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு எந்தவிதமான உணவும் உட்கொள்ளக் கூடாது.( உணவு, நீர் ஆகாரம்)
* 45 நிமிடங்களுக்குப் பின் உங்களின் வழக்கமான உணவை உட்கொள்ளலாம்.
* காலை உணவிற்கு பின் 15 நிமிஷங்களுக்கும், மதியம் மற்றும் இரவு உணவிற்கு பின் 2 மணி நேரங்களுக்கு எந்தவிதமான ஆகாரங்களும் உட்கொள்ளக் கூடாது. (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
* ஒர் முறையில் 4 டம்ளர் தண்ணீரை அருந்த முடியாத முதியோர் அல்லது நோயாளிகள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருந்தி நாளடைவில் 4 டம்ளர் அளவு தண்ணீர் அருந்த பழகிக் கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றுவதனால் நோயாளிகள் தமக்கு ஏற்பட்டுள்ள நோய்கள் நீங்கி சுகம் பெற்று ஆரோக்கியமான வாழ்கையை வாழலாம்.
எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும்:
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்களும்
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்களும்
சர்க்கரை வியாதிக்கு - 30 நாட்களும்
மலச்சிக்கல் - 10 நாட்களும்
புற்றுநோய் - 180 நாட்களும்
காச நோய் - 90 நாட்களும்
ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும். பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமைகள் மட்டுப்படுத்தப்பட்டு வலிமைகள் உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றினால் மிகவும் நன்மை தரும் என்றே நம்ப வேண்டும். இதனைதான் "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?
நன்றி : தினமணி
No comments:
Post a Comment