Saturday, July 20, 2013

சோடு

முதிர்ந்த நெற்மணிகளின் கதிர்கள் அறுவடை  ஆகின வயல்  மூச்சு வாங்க ஓய்வெடுக்க தனித்து விடப்பட்டது.

சில வயல்களில் கதிர் தாள்கள் அப்படியே கிடந்து காய்ந்தது. வயல்கள் மஞ்சள்வெண்மையாய்  தெரிய  இன்னும் சில வயல்கள்   நிலமண்ணின் நலனுக்காக கோடை உழவு செய்யப்பட்டு கருப்பாய் தெரிந்து.

தூரத்து பார்கையில் வெண்மை கருப்பு கருப்பு வெண்மையாய் வயல்களின் அளவை  வரப்பு வேறுப்படுத்தி காட்டி கொண்டே பரந்தவெளியாய்  தன்னை வயல்கள் உருவகப்படுத்தி கொண்டது.


மாலை நேரங்களில்  வயல்கள் ஆரம்பிக்கும் ஒரு முனையில் நின்று பார்த்தால் குறுக்காய் ஓர் வெள்ளைக்கோடு நீண்டு கொண்டே செல்லும்.

கோடை ஆரம்பித்தது. மிதிவண்டிகள் குறைந்து  பாதச்சாரிகள் நிறைந்த காலம் அது.  அப்பொழுதைய பொருளாதார சூழலில் காலணிகள் வாங்கி நடப்பது கடினம்.

காலணிகள் வாங்கினாலும் மிதிவண்டிகள் வெகுசிலரிடமே…எங்கு சென்றாலும் நடைப்பயணம் தான்.

கோடைகாலங்களில் தார்சாலைகளில் நடந்துபயணிப்பது என்பது அறிவிக்கப்படாத தண்டனை.

ஒர் சாலைக்கும் மற்றொரு சாலைக்கும் வயல்கள் குறுக்கே இணைக்கும் ஒற்றையடிபாதையாய் பாதச்சாரிகளால் கோடைகாலங்களில் உருவாகும் தற்காலிக பாதை தான் சோடு.

கோடை ஆரம்பித்ததும்..ஏல   வயல்லசோடு உழுந்திடுச்சாடா? என்ற  வினா தொக்கி நிற்கும்.


பகல் இரவு என்ற பாராமல் மனிதர்கள் பயன்பாட்டில் சோடு இருக்கும் . கோடைமுடிந்து திரும்பவும் வயல்களில் விவசாயபணிகள் ஆரம்பிக்கும்  வரை    சோடு நிலைத்திருக்கும்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails