மக்கள் இன்றைய பரபரப்பான சூழலில் தங்களை தளர்த்தி கொள்வதற்கு நேரம் ஒதுக்குவதே இல்லை. மூளையை எப்போதும் இயக்கத்திலே வைத்திருக்கின்றனர்.
பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் மக்கள் அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கி மனதை அமைதிப் படுத்துவதே இல்லை. பெரும்பாலானோர் வாயை திறந்து பாடுவதற்கு வெட்கப்படுவர். இதனால் ஏராளமான விஷயத்தை இழக்கின்றனர்.
நாள் முழுவதும் வாயை திறந்து பேசாமல் இருந்தால், வாய் ஒருவித துற்நாற்றம் ஏற்படுவதை நீங்கள் உணர்த்திருக்கிறீர்களா? சிலர் வாயை திறந்து பேசுவதற்கும் தயக்கப்படுவர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம்.
மனதில் உள்ள அழுத்தங்களை போக்க வாயை திறந்து மற்றவர்களிடம் பொது விஷயத்தையோ, நல்ல தகவல்களையோ பரிமாறி கொள்ளலாம். அதற்கு வாய்ப்பு இல்லையெனில் நமக்கு பிடித்த பாடல்களை பாடலாம்.
பாடுவதினால், இதய துடிப்பு சீராக துடிக்கின்றது. இதயத்திற்கு செல்லும் நரப்புகளின் இரத்த நாளங்கள் விரிவடைந்து, சரியான விகிதத்தில் இரத்தம் செல்கின்றது. இதை தவிர மூளைக்கு செல்லும் நரம்புகளும் புத்துணர்ச்சி அடைந்து உற்சாகம் ஏற்படுகிறது.
அதனால் தான் என்னவோ? குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும், அனைவரும் ஒரே இடத்தில் கூடி இறை வணக்கம் செய்கின்றனர். ஒருங்கிணைந்து பாடும் போது இதயம் சீராக துடித்து, மூளை புத்துணச்சி அடையும்.
பாடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதயம் நன்றாக இயங்குவதோடு மன அமைதியும் பெறும்.
நன்றி : தினமணி
1 comment:
என்ன ஒரு மூடத்தனம்...! யார் சொன்னது? இருக்காது...? அப்படி எதுவும் நடக்காது...? ஹிஹி...
உண்மை...
நன்றி...
Post a Comment