காரணம்
தெரியா
கோபம்
முகம்
சுளித்து
வேகமாய்
உமிழ்ந்த
வார்த்தைகள்
இளம்
வெயிலின்
காலையில்
எதிராளியின்
மனது
குமுறியது
தன்
குற்றம்
தெரியாது
தடுமாற்றம்
பதில்
பேசா
மௌனமாய்
நகருகையில்
மனது
வலித்தது
தன்பக்க
நியாயங்களை
வேக
வேகமாய்
எடுத்துரைக்க
செய்குற்றம்
புரிந்தது
இருவருக்கும்
அன்றைய பொழுது
உப்பு இல்லா
உணவாய்
சப்பென்றிருக்க
ஆர்வம் இல்லா
பேச்சுகள்
புன்னகையை மறந்த
உதடுகளாய்
சுடு மணலில்
நடக்கும் செயலாய்....
No comments:
Post a Comment