Friday, July 26, 2013

சுடுமணலில் நடக்கும் வாழ்வு

காரணம் தெரியா
கோபம்
முகம் சுளித்து
வேகமாய்
உமிழ்ந்த வார்த்தைகள்
இளம் வெயிலின்
காலையில்
எதிராளியின்
மனது குமுறியது
தன் குற்றம்
தெரியாது தடுமாற்றம்
பதில் பேசா
மௌனமாய் நகருகையில்
மனது வலித்தது
தன்பக்க நியாயங்களை
வேக வேகமாய்
எடுத்துரைக்க
செய்குற்றம்
புரிந்தது

இருவருக்கும்
அன்றைய பொழுது
உப்பு இல்லா
உணவாய்
சப்பென்றிருக்க
ஆர்வம் இல்லா
பேச்சுகள்
புன்னகையை மறந்த
உதடுகளாய்
சுடு மணலில்

நடக்கும் செயலாய்....

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails