இரண்டு
நாட்களில் மேட்டூர் அணை திறக்கபோகிறார்கள். இம்முறைசம்பா ஒரு போகம் நடலாம். நாற்று விடுதலுக்கான பணிகள் விரைவாக
ஆரம்பிக்க வேண்டும்.
பருவமழை
இந்தவருடம் மிகவும் கடுமையாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் மழை வெள்ளத்தை சமாளிக்கும் வகையில் நெல் ரகம்
தேர்ந்தெடுக்கவேண்டும் என விவசாய
பொதுமக்கள் பேசி கொள்கிறார்கள்.
வறண்ட
அணை நிரம்பியது மகிழ்ச்சி ஆனாலும்
பருவமழையின் எதிர்பார்ப்பில் கவலை கொள்ளவைக்கிறது.
சென்றமுறை
கையைகடிக்காமல் வாங்கிய கடனை அடைத்தால்
போதும் வைத்த நகையை திருப்பினால் போதும் விளைந்த பயிர் விளையுமா விளையாதா என்ற மன
பட்டிமன்றம் நடந்து கொண்டே இருந்தது.
கடன்பட்டவர்கள்
பாதி கடன் அடைத்தவர்கள் பாதி என்று இருக்க விளைந்த போக காய்ந்தது மீதி என்று
இருந்தது.
நிலத்தடி
மோட்டார் வைத்து விவசாயம் செய்தவர்கள் சென்றமுறை சம்பாதித்து கொட்டினார்கள்.
இந்தமுறை
குறுவை ஒன்றும் சரியாக இல்லை ஏதோ
விளைந்தது சில இடங்களில் நன்றாகவும் விளைந்தது.
மனித
உழைப்பை தாண்டி இயற்கைகட்டுபாட்டில் தான் எல்லாமே என்று திரும்பவும் திரும்பவும்
நிரூப்பிக்கப்படுகிறது.
மனித உழைப்பில் தொடங்கும் விவசாயம் இயற்கையின்
ஒத்துழைப்பில் தான் அதனுடைய வெற்றி.
ஆடிமாதம் எல்லாம் டல்லடிக்க காற்று பிய்த்து
எடுக்கிறது.
நடவு பணிகள் தொடங்கினால் டாஸ் மாக் மதுபானகடைகள்
நிரம்ப கல்லாகட்டும். விவசாய ஆட்களுக்கு தட்டுபாட்டில் குவார்டர் பாட்டில்கள்
பேரம் பேசப்படும்.
ஒரு போக விவசாயம் இம்முறை நல்லமுறையில் தொடங்குகிறது.
No comments:
Post a Comment