Monday, September 30, 2013

கொஞ்சம் அரசியல்.

நாகை நகரம் பா.ஜ.க  என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்ட
வேன்கள் பா.ஜ.க. கொடி தாங்கி  நாகையிலிருந்து திருச்சி நோக்கி  விரைந்து சென்றுக்கொண்டிருந்தன.

மதியம் 12 மணியளவில் எனது இருசக்கர வாகனபயணம்  மிக கவனமுடன்  நிகழ்ந்தது.

இடையே இடையே மரநிழல்களில் ஒவ்வொரு வேனை நிப்பாட்டி தயாரித்த கொண்டு வந்திருந்த பட்டைசாதம் பாக்கு மட்டை தடடுகளில் விநோயிக்கப்பட்டது.

வருங்கால பிரதமர் … மோடி  குரொலிகளுக்கு குறைவில்லை.

அ.தி.மு.க.    , தி.மு.க. வண்டிகளின் அணிவகுப்பையே பார்த்த கொண்டிருந்த கண்களுக்கு  தமிழ்நாட்டில் பா.ஜ.க. எழுச்சி பொதுமக்கள் மக்கள் மத்தியில்   மோடி திருச்சிக்கு வருகை புரிந்த நாள் முழுவதும் விவாதிக்கப்பட்டு கொண்டிருந்தது.

மறுநாள் மறந்து போனார்கள் திருவாளர்கள் பொதுமக்கள்.

முந்தைய நாட்களில் பா.ஜ.க.   எங்கள் ஊரில் இருப்பதை அந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நாளில் மட்டுமே தெரிந்து கொள்ளலாம் .


இத்தகைய சூழலில்  இக்கட்சியின் திடீர் எழுச்சி    மோடியை மையப்படுத்தி தான் என்று சொல்வதில் ஒன்றும் மோசமில்லை   தான்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails