Wednesday, November 06, 2013

பிடி மீறுதலில்



காட்சி பிழையாய்
நகரும் வாழ்வு
முடிந்த இடத்தில்
தொடர்கிறது-நம்பிக்கை

எதிர்பார்ப்புகள்
எத்தனை தூரம்
இழுத்து சென்றாலும்
அலுப்பதில்லை- முயற்சி

நிரந்தரமற்ற
நாளைக்குள்
இன்றைய என்னை
தொலைத்தேன்-கனவு

நகர்கிறது
வாழ்வு நகர்கிறது

பிடிக்குள்
பாசம்
பிடி மீறுதலில்
அன்பாகியது

கட்டு அறுத்தலில்
தொடங்கிய வாழ்வு
காட்சி பிழையாய்

முடிந்து போகிறது.

1 comment:

அ.பாண்டியன் said...

அனைத்தும் அருமை.ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி. தொடர வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails