Friday, November 07, 2014

குட் டே...!!

கீதை படிக்க தூக்கம் வந்தது  மூடி வைத்தேன். தூக்கம் கலைக்க குட் டே ரொட்டிகளை கடித்தேன்  சாப்பிட்டேன்  தூக்கம் கலைய சிந்தனை வந்தது.

செய்தே தீர வேண்டிய செலவுகள் கண்முன்னாடி வரிசை கட்டின. தூக்கம் போனது ஏக்கம் வந்தது.

எப்படி சம்பாதிப்பது இன்னும் அதிகமாய்...????

என்ற சிந்தனையின் ஊடே ...பல வருடங்களுக்கு முன்னால் யாகுவில் ஒரு நண்பரிடம்  சாட்டிங் செய்தது ஞாபகம்  வந்தது.

பணம் உன்னிடம் இருக்கு...உன்னுடைய தொழில் திட்டம் பற்றி சொல் என்று கேட்டார்.

என்னிடம் தான் இல்லையே...

சரி..நான் தருவதாய் வைத்துகொள் ...உன்னுடைய தொழில் திட்டம் என்ன ?

இதெல்லாம் காரியத்துக்கு உதவுமா பாஸ் ..என்றேன்.

திரும்பவும் கேட்டார்.

நான் திரும்பவும்  என்னிடம்  இருந்தால் தானே திட்டமிடலாம் என்றேன்.

பணம் பற்றிய கவலையை விடு ...திட்டம் பற்றி சொல்...

திட்டம் தெரியவில்லை... சாட்டிங்கை விட்டு வெளியேறினேன்.

வருமானம்  ஒரு வழி செலவு பல வழிகளில் திக்கு முக்காட செய்ய  வண்டி நிற்காமல் ஓடுகிறது.

வார்த்தைகளும் விமர்சனங்களும் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று வெறியூட்ட வாய்ப்புகளை தேடி....


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails