Saturday, December 13, 2014

அப்பா கேட்ட கணக்கு

புள்ள 65000 சம்பளம் வாங்குறான் பெருமையாத்தான் இருக்கு ஆனா நமக்கு ஒன்னும்  ஆவலயே  என்று பையனின் அப்பா புலம்பல்.

என்னப்பா பணம் ஒன்னுமே அனுப்பல....

இருப்பா ஊருக்கு வர்றப்ப பேசிக்கலாம் மகனின் பதில்...

பையன் நல்ல வேலையில் சேர்ந்த பிறகு  உழைக்கும் உடம்பு இருந்தும்  கொஞ்சம் சோம்பல் அடித்தார் . சரியாக கடை திறப்பதில்லை. காலை திறந்து மதியம் மூடி கிடக்கும்.

அவர் கடை நாடி நம்பிசெல்வோர்கள் ஏமாந்து திரும்புவார்கள்.

மகன் தன் கடமை உணர்ந்து கல்யாண வயது தங்கையை நல்ல செலவு செய்து கரை சேர்த்தான்.

வீட்டுக்கும் பணம் அனுப்பி கொண்டிருந்தான்.

அவனுக்கு கல்யாணம் நடந்து குடும்பத்துடன்  வேலை பார்க்கும் இடத்துக்கு தன் மனைவியுடன் குடியிருப்பை மாற்றி கொள்ள மாதம் அவன் அப்பாவுக்கு ஒதுக்கும் பட்ஜெட்டில் துண்டு விழுந்து.

வேட்டி விழுந்த இடத்தில் துண்டு விழுந்து துண்டும் கோவணமாகி போனது.

அப்பாவுக்கு ஆயிரதெட்டு சிந்தனைகள்  என்னடா  பணம் அனுப்பிய பையன் அனுப்பவில்லையே என்று.

அவருக்கு தெரிந்தவர்களிடம் அவர் பேசாமல் இல்லை.

மகன் வந்தான் ...

அப்பா வீட்டு தவணை  .....கார் தவணை....கரண்ட் பில்....என்று குறிப்பு எழுதி செலவு கணக்குகளை ஒப்படைக்க...

பார்த்தார்..படித்தார்...

அவர் கடை திறக்க எழுந்தார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails