Saturday, November 15, 2014

யானி

நேற்று  தி இந்து இணையதளத்தில் இசைமேதை யானி பற்றி படித்தேன். ஆர்வமாய் இணையங்களில் தேடினேன்.

இசை வீடியோக்கள் சிலவற்றை பார்த்தேன்.  அவரது இசை அனைவரையும் கட்டிபோட்டதில் ஆச்சரியமில்லைதான்.

ரசித்தேன் உள்வாங்கி ருசித்தேன்.

ஓர் உயரிய உண்மை கலைஞனுக்கு வணக்கம் செய்கிறேன்.

யானி -எல்லைகளை உடைத்த இசைநதி



Tuesday, November 11, 2014

சாதிவாரி கணக்கெடுப்பு

சட்டர்  கதவு மூடியும் மூடாமலும்  திறந்த கிடந்த கடையில் கணக்காளர் வைத்து எழுதும் ஓர்  சிறிய மேசை ஒன்று. கடையின் முன்புறம் மூன்று பிளாஸ்டிக் சேர் தரையில் கால் பொதித்து வைக்கப்பெற்ற ஓர் சிறிய மரப்பெஞ்சு. பெயிண்ட் மரபெஞ்சின் வழுவழுப்பான தன்மையே எத்தனைபேர் உட்கார்ந்து இருப்பார்கள் என்று கணக்கு சொன்னது.

கடையின் உள்ளே நடுத்தர பெண்மணி..

எதிரே பெரியவர் ஒருவர் அமர்ந்திருக்க....

உள்ளே ராக்கைகளில் பிரித்து வைக்கபட்ட பல்வேறு வண்ண காகிதங்கள்
கள்ளர் ஆண்
கள்ளர் பெண்
அகமுடையர் ஆண்
அகமுடையர் பெண்

இன்னும் பல உட்பிரிவுகளில்  ஜாதகங்கள் பிரித்து வைக்கப்பட்டிருந்தது.

பெண் பார்க்க...மாப்பிள்ளை பார்க்க அணுகவும்.

பெண் கிடைக்காதவர்கள்

மாப்பிள்ளை கிடைக்காதவர்கள்  குறிப்பிட்ட சாதியினருக்கு காசு வாங்கி கொண்டு வரன்கள் அமைத்து கொடுக்கும் இடம் அது.

பொண் பக்கதிலிருக்கு மொகந்தனூர் தான் .

பெரியவர்  ஆங்..விழித்து காது மடலை கைவிரலால் வளைத்துபிடித்து கூர்மையாக்கினார்.

பெண்மணி புரிந்தவராய் அவர் காதருகே சென்று இங்கிருக்கில்ல மோத்தனூா் அதான்.. என்று சொல்ல

ஆங் ...அப்படியா என்று விளித்தார்.

பல்வேறு சாதியினர்  அங்கிருக்க...

சாதிவாரி கணக்கெடுப்புக்கு  சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது ஞாபகத்து வந்தது.
பாரதியாரின் ஓடிவிளையாடு பாப்பாவும் ஞாபகத்துக்கு வர மறுக்கவிலவ்லை.

எங்கள் ஊரில்   மூவேந்தர் முன்னேற்றகழகம்  அம்பேத்கர் மக்கள் இயக்கம் இயங்கி கொண்டிருக்கிறது.


Monday, November 10, 2014

லோட்டா

லோட்டா  தான் அன்றைய பிரச்சனையின் ஆதாரம்.  தண்ணீர் குடிக்க கொடுக்கும் தமிழர்களின் பழங்கால பாத்திரவகைகளில் இதுவும் ஒன்று.

இரவு 9 மணிக்கு வேலை முடித்து வீடு திரும்பினான். வீட்டு  கூடத்தில் நடு நாயகமாய்  லோட்டா வீற்றிருந்தது.

ஏண்டி....மதியம் சாப்பிட்டப்ப தண்ணி கொண்டு வந்து வச்ச லோட்டா தானே இது. எடுத்து வைக்கலாயா...??

முகம் தூக்கி பார்த்து  முகம் கவிழ்ந்தாள்.

என்னடி நீ வேலை பாக்குறது.. இதெல்லாம் சரியா பாக்காட்டின்னா நான் திட்ட செய்வேன். அப்புறம் நீ என்ன கோச்சுக்க கூடாது.

மறுபடியும் முகம் தூக்கி என் முகபாவணை பார்த்து முகம் சுருங்கினாள்.

பேசவில்லை....

சரியான பதில் இல்லையாதலால் கோபம் வந்தது திரும்பவும் பேசினான்.

இந்த முறை பேச்சு வந்தது.

இந்தபாருங்க  இது டெய்லி நடக்குதா.. இன்னிக்கு நடந்துடுச்சு அதுக்கு போயி திட்டிட்டே இருக்கீங்க...

ஆமா..திட்டுவேந்தான்... மதியத்திலிருந்து எத்தனவாட்டி போயிட்டு வந்திட்டிருக்க நடுகூடத்துலதான கெடக்கு  எடுத்து வைக்கவேண்டியதானே...

சிறிது நேரம் மௌனம் நிகழ்ந்தது.

அவனால் லோட்டா எடுத்து வைக்கப்பட்டது.

நான் உன்ன ஒன்னு சொல்லாம இருக்குன்னா இது மாதிரி  சின்ன விசயங்கள் தப்பு நடக்காம பாத்துக்கப்பா  என்றான்.

ஏப்பா...ஒரு லோட்டா எடுத்துவைக்கமா இருந்தது இவ்வளவு அதக்களம் என்றாள்.

திரும்பவும் வாதம் செய்ய வாயெடுத்தான்.

மௌனமானான்.




Friday, November 07, 2014

குட் டே...!!

கீதை படிக்க தூக்கம் வந்தது  மூடி வைத்தேன். தூக்கம் கலைக்க குட் டே ரொட்டிகளை கடித்தேன்  சாப்பிட்டேன்  தூக்கம் கலைய சிந்தனை வந்தது.

செய்தே தீர வேண்டிய செலவுகள் கண்முன்னாடி வரிசை கட்டின. தூக்கம் போனது ஏக்கம் வந்தது.

எப்படி சம்பாதிப்பது இன்னும் அதிகமாய்...????

என்ற சிந்தனையின் ஊடே ...பல வருடங்களுக்கு முன்னால் யாகுவில் ஒரு நண்பரிடம்  சாட்டிங் செய்தது ஞாபகம்  வந்தது.

பணம் உன்னிடம் இருக்கு...உன்னுடைய தொழில் திட்டம் பற்றி சொல் என்று கேட்டார்.

என்னிடம் தான் இல்லையே...

சரி..நான் தருவதாய் வைத்துகொள் ...உன்னுடைய தொழில் திட்டம் என்ன ?

இதெல்லாம் காரியத்துக்கு உதவுமா பாஸ் ..என்றேன்.

திரும்பவும் கேட்டார்.

நான் திரும்பவும்  என்னிடம்  இருந்தால் தானே திட்டமிடலாம் என்றேன்.

பணம் பற்றிய கவலையை விடு ...திட்டம் பற்றி சொல்...

திட்டம் தெரியவில்லை... சாட்டிங்கை விட்டு வெளியேறினேன்.

வருமானம்  ஒரு வழி செலவு பல வழிகளில் திக்கு முக்காட செய்ய  வண்டி நிற்காமல் ஓடுகிறது.

வார்த்தைகளும் விமர்சனங்களும் நாமும் சம்பாதிக்க வேண்டும் என்று வெறியூட்ட வாய்ப்புகளை தேடி....


LinkWithin

Related Posts with Thumbnails