Friday, January 23, 2015

அறியாமையும் மரணமும்

காரணம் தெரியவில்லை நண்பர்  தற்கொலை செய்து கொண்டார். சில வருடங்களாய் தொடர்பில் இல்லை தான். அவரது மரணம் சிந்திக்க வைத்தது.

அவரது பெண் பேப்பர் படித்தது. அவரது ஆண்பிள்ளை பிள்ளைகளுடன் சிரித்து விளையாடி கொண்டிருந்தான். மரணம் பற்றி தெரியாத பிள்ளைகள்.
பிள்ளைகளை பொருத்தவரையில் நண்பர் தூங்கி கொண்டிருக்கிறார்.

பிள்ளைகளின் தாய் சவப்பெட்டியோரம் உடைந்து தேம்பினார்.

வாழத்தெரியாத கோழை மனிதனின் மரணம் தான் தற்கொலை என்று கருத்து சொன்னார்கள்.

இந்த பூமியில் அவரது வேலை முடிந்துவிட்டது உடம்பைவிட இது ஒரு வழி என்ற தத்துவம் சொல்லப்பட்டது.

எதிர்பார்ப்பில் விழுந்த அடி மனைவியை பதறவைத்தது.

எதிர்பார்ப்பு இல்லா குழந்தைகள் விளையாடியது.

அம்மா இருக்கிறார் அப்பா தூங்குகிறார்.

அறவாழி என்ற நணபர் தூங்குகிறார்.



No comments:

LinkWithin

Related Posts with Thumbnails