Wednesday, October 28, 2015

முகம் மாறிய சாலை

NH 67

கருமேகங்கள் சூழ்ந்திருந்தன லேசாய் மழை துாரல் ஆரம்பிக்க  ..

போகலாமா? வேண்டாமா...மனதின் போராட்டம்.

ஆங்...அதான் வழி நெடுக மரமா இருக்குண்ணா..அப்படியே ஒண்டி ஒண்டிக்கிட்டே ஊர் போய் சேரலாம்.

கௌம்புங்க.. நண்பர் விரட்டினார்.

பசுமையான மரக்குகை முன்விரிய மழைதுாரல்கள் இடைய வண்டி பயணித்தது.
இந்தியா கடன்காரர்களின் உலகம் ஆகிவிட்டது. என்னையும் சேர்த்துதான்.

கடனில் ஓடும் இருசக்கரவாகனங்கள் நாற்சக்கர வாகனங்களின் பெருக்கம்
சாலை மூச்சு முட்டியது.

தங்கநாற்கர சாலை விரிவுபடுத்தும் திட்டத்தில்  NH67 சிக்கிக்கொள்ள கணக்கெடுத்தார்கள் .

எத்தனை தலைமுறைகளை பார்த்த மரங்கள் நிழல் பரப்பின பயன் தந்தன உருப்படாத சாலை விரிவாக்க திட்டத்தில் மண்ணில் வீழ்ந்தன.

ஒரே நாளில்  முழுமரமும் அடியோடு வெட்டப்பட்டு வழிநெடுகலும் வீழ்ந்து கிடக்க பதைத்த மனங்களில் என் மனமும் ஒன்று.

மரம் வெட்டாது திட்டங்கள் போடமாட்டார்களா..?

வெட்டப்பட்ட மரங்கள் ஏற்றியவுடன்   வெறிச்சோடி கிடந்த சாலையின் முகம் மாறியது.

பயணத்தின் இடையே இளைப்பாறி செல்ல நிழல் தந்த மரங்கள் காணாமல் போக வெயிலே நிழலாய் பயணங்கள் தொடரும்.


LinkWithin

Related Posts with Thumbnails