Friday, October 30, 2015

எதிர்கால பயம்

பள்ளிவிழா  மரக்கன்றுகள் இலவசமாய்வழங்கினார்கள் மரக்கன்றுகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கவேண்டும் என்பதற்காகவே பள்ளிதலைமையாசிரியர் பாடுப்பட்டுசெம்மரக்கன்றுகள்சந்தனமரக்கன்றுகள் தருவித்திருந்தார்.

மரக்கன்றுகளை வாங்கியவர்களில் ஒருவனுக்கு ஏனோ  ஒரு எண்ணம் உதித்தது.



மரக்கன்றை நாம் நட்டு வளர்த்துவிடலாம். பதினைந்து வருடம்  கழித்து பல லட்சம் விலைபோகும் மரங்கள் இவை.
பயன் தரும் நேரத்தில் எவனாவது வெட்டி சென்றால் என்ன செய்வது?

இந்த கன்றை வைத்து கண்முழித்தா பாதுகாக்க முடியும் மனம் தன்போக்கில் ஒரு வாதம் வைக்க..

போடா…மடபய மவனே..போயி குழி தோண்டு செடிய வையி..அப்புறம் பாத்துகலாம் இன்னொரு வாதம்.

வாங்கியாச்சு வைச்சுதானே ஆகனும் என்று தனக்குள் சொல்லி..

கொல்லை இடம் தேடி குழிபறித்து நட்டான்.

செடி மண்ணில் வேர்ஊன்றி தன் வளர்ச்சிக்காக காத்துகிடக்க…

இரு நாட்கள் கழித்து இணையம் நோண்டுகையில் ஒரு செய்தி.

கோவையில்கொல்லையில் வளர்த்த சந்தனமரம் திருட்டு  என்று

செய்தியின் இணைப்புக்கான URL


அட பாவியலா..இவன் நினைச்சது சரியாப்போச்சே…

இனி பயப்புட்டு என்ன செய்யப்போறோம் .

மொதல்ல மரம் வளர்ப்போம்..அப்புறம் பாதுகாப்போம் சொல்லிட்டு ..

தன் வேலையை  பார்க்க ஆரம்பித்தான்.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails